பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை புரிந்து கொள்வதில் முக்கிய அளவீடாக பார்க்கப்படுகிறது Per Capita Income எனப்படும் தனிநபர் வருமானம். சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் தனிநபர் வருமானம் கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளது. அது பற்றி விரிவாக பார்ப்பதற்கு முன்பு தனிநபர் வருமானம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தனிநபர் வருமானம் என்பது ஒரு நாட்டில் ஒரு தனிநபர் சம்பாதித்த பணத்தின் அளவை குறிப்பதுதான் தனிநபர் வருமானம். பொதுவாக நாட்டின் வருமானத்தை அதன் மக்கள் தொகையால் வகுப்பதன் மூலம் இது கணக்கீடு செய்யப்படுகிறது. இந்த வருமானத்தில் ஆண், பெண் மற்றும் குழந்தை என ஒவ்வொருவரின் எண்ணிக்கையும் அடங்கும். ஒரு நாட்டில் தனிநபர் வருமானம் என்பது அந்த நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாக இருக்கிறது.

தனிநபர் வருமானத்தை கணக்கீடு செய்வதில் கிடைக்கும் முக்கியமான நன்மை ஒரு நாட்டின் மக்கள் செல்வ வளத்துடன் இருக்கிறார்களா, அத்தியாவசிய சேவைகள் கிடைக்கிறதா, போதிய வருமானம் கொண்டுள்ளார்களா என்பன உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளலாம். இன்வெஸ்டோபீடியா தளம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டில் உலக அளவில் தனிநபர் வருமானத்தின் அளவு 17,500 டாலர்கள். 8 பில்லியன் மக்கள் தொகைக்கு இது கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அப்படி எனில் மொத்த உலக ஜிடிபி 139 ட்ரில்லியன் டாலர்கள்.
இந்தியாவில் மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் தான் தனிநபர் வருமான கணக்கீட்டினை வெளியிடுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த 1947ஆம் ஆண்டில் தனிநபர் வருமானம் 249 ரூபாய் ஆகும். மேக்ரோ டிரெண்ட்ஸ் என்ற தளம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்தியாவில் 1960 ஆம் ஆண்டில் தனிநபர் வருமானம் என்பது 83 அமெரிக்க டாலர்களாக இருந்தது. அன்றைய தேதியில் ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 4.76 ரூபாய்க்கு சமம் ஆகும். அதாவது 1960இல் தனிநபர் வருமானம் 395 ரூபாய்.
இதுவே 20 ஆண்டுகளில் 1980 ஆம் ஆண்டில் 267 டாலர்கள் அன்றைய டாலர் மதிப்பு நிலவரப்படி இந்தியா ரூபாய்க்கு மாற்றினால் 1,765 ரூபாய் ஆகும். 2000 ஆம் ஆண்டில் இந்தியாவில் தனிநபர் வருமானம் 19,585 ரூபாய் என உயர்ந்தது. 2007ஆம் ஆண்டில் முதன்முறையாக 50,454 ரூபாய் என்ற மைல்கல்லை எட்டியது. 2024 ஆம் ஆண்டில் 2730 அமெரிக்க டாலர்கள் அதாவது 2.23 லட்சம் ரூபாய் என்ற அளவில் நீடிக்கிறது.
சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவில் தனிநபர் வருமானம் கடுமையான சரிவை சந்தித்த ஆண்டு 1966 ஆகும். அப்போது தனிநபர் வருமானம் 24 சதவிகிதம் மைனஸிலிருந்து. 675 ரூபாய் தான் தனிநபர் வருமானம். இதனை அடுத்து 1975, 1984 ,1991, 2009 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவில் தனிநபர் வருமானம் கணிசமான சரிவை கண்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் தற்போது வரை கடந்த 2007 ஆம் ஆண்டில் தான் அதிகபட்சமாக தனிநபர் வருமானம் 27.52% உயர்ந்துள்ளது. வெறும் 249 ரூபாயில் இருந்த தனிநபர் வருமானம் 7 தசாப்தங்களில் 2.23 லட்சம் ரூபாய் என பல மடங்கு அதிகரித்துள்ளது.
Story Written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications