இந்தியாவில் மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றாக UPSC தேர்வுகள் கருதப்படுகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களின் கதைகள் மற்றவர்களுக்கு எப்பொழுதும் உத்வேகம் அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். அத்தகைய ஒரு கதை ஹரியானாவைச் சேர்ந்த விஜய் வர்தனின் கதை. ஏனென்றால் விஜய் வர்தன் தொடர்ந்து 35 முறை அரசாங்க தேர்வுகளில் தோல்வி அடைந்து, அதன் பிறகு யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவர் எப்படி கஷ்டப்பட்டு உழைத்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
ஒரு அரசு வேலைக்கான தேர்வில் கூட வெற்றி பெற முடியாமல் இருந்த விஜய் வர்தன், 35 முறை தேர்வுகளில் தோல்வியடைந்த பிறகு UPSC தேர்வில் வெற்றி பெற்றார். தோல்வி என்பது வெற்றிக்கு எதிரானது அல்ல, வெற்றியின் ஒரு பகுதியே என்பதற்கு விஜய் வர்தன் ஒரு சிறந்த உதாரணம்.

ஹரியானாவின் சிரசாவில் வளர்ந்த விஜய் வர்தன், ஹிசாரில் உள்ள கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். அதன்பிறகு, UPSC தேர்வுக்கு தயாராவதற்காக டெல்லி சென்றார். ஆனால் அதிர்ஷ்டம் அவருக்கு சாதகமாக அமையவில்லை. 35 முறை முயற்சித்தும், ஹரியானா PCS, UPPSC, SSC மற்றும் CGL உள்ளிட்ட அரசுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியவில்லை. ஆனால் அவர் முயற்சியை கைவிடவே இல்லை.
இறுதியாக, 2018-ஆம் ஆண்டு, விஜய் வர்தன் பலமுறை முயற்சித்த பிறகு UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றார். அவர் UPSC தேர்வில் அகில இந்திய தரவரிசையில் (AIR) 104-வது இடத்தைப் பெற்று IPS ஆனார். விஜய் வர்தன் தனது IPS பதவியில் அதிருப்தி அடைந்ததால், மேலும் அவர் மீண்டும் UPSC தேர்வில் கலந்து கொண்டு 2021-ஆம் ஆண்டில் IAS ஆனார்.
உலகின் கடினமான தேர்வில் 1 முறை அல்ல 2 முறை வெற்றி பெற்றுள்ளார். ஒரு நேர்காணலில், விஜய் வர்தன் அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்களிடம் தங்கள் மீதான நம்பிக்கையை ஒருபோதும் இழக்காதீர்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.
தொடர் தோல்விகளால் மனம் சோர்வடையாமல், தனது தவறுகளில் இருந்து விஜய் வர்தன் பாடம் கற்றார். ஒவ்வொரு முறையும் அரசாங்க தேர்வுகளில் தோல்வி அடைந்த பிறகு தான் என்ன தவறு செய்தேன் என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.
அதன் பிறகு அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள தொடங்கியுள்ளார். எனவே இதே நிலைமையை எதிர்கொள்ளும் அனைத்து யூபிஎஸ்சி தேர்வர்களுக்கும் அவர் ஒரு எடுத்துக்காட்டு. உங்களையும் உங்கள் கனவுகளையும் நம்ப முயற்சி செய்யுங்கள்.
விஜய் வர்தனின் வாழ்க்கைப் பயணம், தோல்வியை வெற்றியின் படிக்கல்லாக மாற்றியதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். அவரது உறுதி, தன்னம்பிக்கை மற்றும் தொடர் முயற்சிகள், பலருக்கு உத்வேகமாகவும், தன்னம்பிக்கையை வளர்க்கும் உதாரணமாக திகழ்கிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications