கொரோனா முதல் அலை தணிந்த பின்பு நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்ப மிகவும் முக்கிய காரணமாக இருந்தது விழாக்கால விற்பனை தான்.
சந்தை வல்லுனர்கள் கணிக்கப்பட்டதை விடவும் மிகவும் சிறப்பான வர்த்தகம் பதிவு செய்யப்பட்ட காரணத்தால், இந்த வருடப் பண்டிகை கால விற்பனைக்கு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் முன்கூட்டியே தயாராகியுள்ளது.
கொரோனா முதல் அலை
கொரோனா முதல் அலையில் நாட்டின் வர்த்தகம் மாறும் வேலைவாய்ப்பு என அனைத்தும் பாதிக்கப்பட்டு மக்களின் நிதிநிலை மிகவும் மோசமான நிலைக்குப் தள்ளப்பட்டது. இந்த சூழ்நிலையிலும் பண்டிகை கால விற்பனை மிகவும் சிறப்பாக இருந்த காரணத்தால் இந்த வருடம் முன் கூட்டியே தயாராகி வருகிறது எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள்.
கொரோனா 2வது அலை
கொரோனா 2வது அலையில் அதிகளவிலான வர்த்தக பாதிப்பு இல்லாத காரணத்தால் மக்களின் வேலைவாய்ப்பு அளவீடும் பாதிக்கப்படவில்லை, இதனால் மக்கள் கையில் போதுமான பணம் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இதன் மூலம் கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் பண்டிகை கால விற்பனை மிகவும் சிறப்பாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
பண்டிகை கால விற்பனை
பொதுவாக நிறுவனங்கள் ஆகஸ்ட் மாதத்தின் கடைசியில் இருந்து தான் பண்டிகை கால விற்பனைக்காக உற்பத்தியைத் துவங்கும். ஆனால் தற்போது ஜூலை மாதத்தில் இருந்து உற்பத்தியைத் துவக்கவுள்ளது.
உற்பத்தி மந்தம்
நாட்டின் பல பகுதிகளில் இன்னும் கொரோனா தொற்று இருக்கும் காரணத்தால் உற்பத்தி பணிகள் மந்தமாகவே உள்ளது. ஒரு பக்கம் பண்டிகை காலத்தில் வர்த்தகம் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது, இதேவேளையில் உற்பத்தியும் மந்தமாக இருக்கும் காரணத்தால் உற்பத்தி பணிகளை முன்கூட்டியே துவங்கியுள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி எல்ஜி, சாம்சங், காட்ரிஜ், ஹேயர், விவோ, ரியல்மீ, ஆப்பிள், பேனாசோனிக், சியோமி ஆகிய நிறுவனங்கள் ஜூலை மாத துவக்கத்தில் இருந்து உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications