சாதிக்கத் துடிக்கும் பெண்கள் திருமணமாகி இல்லத்தரசியாக மாறிய பின் தங்கள் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பிலேயே மூழ்கி விடுகின்றனர். அப்படி இருக்கையில் இல்லத்தரசியாகவும் செயல்பட்டு, அதோடு நிதி சுதந்திரம் அடைய வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணும் இங்கு வெற்றியாளர் தான். அந்த வகையில் இன்றும் ஒரு இல்லத்தரசியைப் பற்றி தான் பார்க்கவுள்ளோம்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த இல்லத்தரசி தான் சந்தனா காடே. இவர் ஆர்கானிக் தோட்டக்கலை மீது பெரிதும் ஆர்வம் கொண்டவர். தற்போது தனது ஆர்வத்தையே ஒரு வெற்றிகரமான வணிகமாக மாற்றியிருக்கிறார். 2016-ஆம் ஆண்டில் வெறும் ரூ.1 லட்சம் முதலீடு செய்து தனது கணவர் நவீன் ஆதரவுடன் லட்சங்களில் சம்பாதித்து வருகிறார்.

நகரங்களில் வசிக்கும் பலர் மாடியில் அல்லது பால்கனியில் தோட்டம் வைக்க வேண்டி அவ்வப்போது விதைகளை வாங்குவார்கள். இது போன்ற நபர்களை குறி வைத்து சந்தனா ஒரு தளத்தை உருவாக்கினார். அதன் பெயர் "சீட் பாஸ்கெட்".
முதன் முதலில் இந்த தளத்தை தொடங்கும் போது இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தரும் என்பது அவருக்கே தெரியாது. தனது மகளுக்கு ஆரோக்கியமான வீட்டில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை உணவளிக்க வேண்டும் என்பதற்காக தரமான விதைகளை வெளியில் வாங்கியுள்ளார். அப்போது விதைகளை தேடுவதில் சவால்கள் இருந்துள்ளது.
இதைத் தெரிந்து கொண்ட சந்தனா நவீனுடன் இணைந்து சீட் பாஸ்க்கெட்டை தொடங்கினார். முதன்முதலாக அவர்கள் அந்த தளத்தை தொடங்கும் போது இரண்டே இரண்டு ஆர்டர்கள் தான் வந்தது. தொடர்ந்து முயற்சி செய்து பல்வேறு விதைகளை வாங்கி விற்பனை செய்ய தொடங்கினர். இன்று இந்தியா முழுவதும் 30,000-த்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சீட் பாஸ்க்கெட் மூலம் காய்கறி, பழம் மற்றும் பூ விதைகளை வாங்குகின்றனர். அத்துடன் தோட்டக்கலைக்கு தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளும் சீட்பாஸ்கெட் தளத்தில் கிடைக்கிறது.
தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் டாடா ஹெல்ப் ஏஜ் போன்ற நிறுவனங்களுடனும் இணைந்து செயல்படுகிறது. இதுபோன்ற நிறுவனங்களுக்கு விதைகளை வழங்கி தோட்டக்கலை தொடர்பான திட்டங்களுக்கு உதவி வருகிறது. அவ்வப்போது மரம் நடும் விழாவெல்லாம் நடப்பது வழக்கம். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கும் விதைகளை வழங்குகிறது.
எதிர்காலத்தில் சீட் பாஸ்கெட் ஒரு மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கி அதன் தயாரிப்புகளுக்கு சலுகைகளை வழங்கி விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. அதிக மக்கள் தற்போது ஆர்கானிக் தோட்டக்கலையை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க அதிகரிக்க இது போன்ற வணிகம் இன்னும் சிறப்படையும் என்பதில் சந்தேகமே இல்லை.
வீட்டுப் பொறுப்புகளை கவனித்துக் கொண்டு தொழில் முனைவோராக மாற முடியாது என்ற கருத்து நிலவி வரும் வேளையில், அதை தகர்த்தெறிந்து தானும் ஒரு தொழில் முனைவோராக மாறி இருக்கிறார் சந்தனா. இவர் நிதி ரீதியாக சுதந்திரம் அடைய வேண்டும் என்று கூறிக்கொண்டு முயற்சி செய்யாமல் இருக்கும் பல இல்லத்தரசிகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தற்போது சந்தனா விதை விற்பனையின் மூலம் வருடத்திற்கு ரூ. 50 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications