மாம்பழம் என்றாலே அது பலருக்கு பிடித்த பழம். வெயில்காலத்தில் சுவையாகக் கிடைக்கும் இந்த பழம், இந்தியாவில் "பழங்களின் அரசன்" என அழைக்கப்படுகிறது. இந்த மாம்பழத்திற்கு ஒரு சாதாரண நேசம் மட்டுமல்லாமல், அதைவிட மேலான ஒரு காதலை வைத்திருக்கும் ஒருவர் இருக்கிறார். அவர் தான் இந்தியாவின் பிரபல தொழில் அதிபரும் மற்றும் மிகப் பெரிய பணக்காரருமான முகேஷ் அம்பானி.
அம்பானி மாம்பழ காதல் ஒரு சிறந்த முயற்சியாக மாறியது: முகேஷ் அம்பானி, அவரது தந்தை திருபாய் அம்பானியுடன் சேர்ந்து, மாம்பழங்களை விரும்பும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். இந்த பழம் மீதுள்ள விருப்பத்தை அவர் வெறும் சாப்பிடுவதற்காக அல்லாமல், ஒரு உலகத்தரம் வாய்ந்த விவசாய முயற்சியாக மாற்றினார். குஜராத்தின் ஜாம்நகரில் இருந்த 600 ஏக்கர் வறண்ட நிலத்தில், அவர் ஒரு பசுமை தோட்டத்தை உருவாக்கினார். இன்று அந்த இடத்தில் 1.5 லட்சம் மாம்பழ மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

எவ்வளவு வகையான மாம்பழங்கள் தெரியுமா?: இந்த தோட்டத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட வகையான பழங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்தியாவில் பிரபலமான அல்போன்சோ, கேசர், ரத்னா போன்ற வகைகளும், வெளிநாடுகளில் இருந்து வந்த டாமி அட்கின்ஸ், கென்ட் (Florida மற்றும் Israel-ல் இருந்து) போன்றவையும் உள்ளன.
இந்த பண்ணை நீதா அம்பானி நேரடியாக பார்வையிட்டு பராமரிக்கிறார். இங்கு இயற்கையை பாதுகாக்கும் விதமாக, தொழில்நுட்பத்தை சார்ந்த பசுமை விவசாய முறைகள் பின்பற்றப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, டிரிப் நீர்ப்பாசனம் (drip irrigation) மூலம் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துகிறார்கள். கடல் நீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள். மேலும், மழைநீரை சேமித்து அதை பயிர்களுக்கு வழங்குகிறார்கள். உரங்களை கூட அதிகமாக அல்லாமல், பயிர்களுக்கு தேவையான அளவுக்கே திட்டமிட்ட விதத்தில் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு இயற்கை சுழற்சிக்கு பாதிப்பின்றி நவீன தொழில்நுட்ப உதவியுடன் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த முறைகளால், ஆண்டுக்கு 600 ஏக்கரில் மாம்பழங்கள் உற்பத்தியாகின்றன. இதில் பெரும்பாலானவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், ரிலையன்ஸ் நிறுவனம் ஆசியாவில் மாம்பழ ஏற்றுமதியில் முதலிடம் பிடித்துள்ளது. விவசாயத்தில் மட்டும் இல்லாமல், இந்த முயற்சி சமூகத்திற்கும் பயனளிக்கிறது. அம்பானியின் நிறுவனம், பசுமை விவசாய முறைகளை இருப்பிட விவசாயிகளுக்கும் பயிற்சி அளிக்கிறது. மேலும், மாம்பழ மர தாவரங்களை இலவசமாக வழங்கி, அவர்களது வருமானத்தையும் உயர்த்த உதவுகிறது.
முகேஷ் அம்பானியின் மாம்பழம் மீதுள்ள நேசம், ஒரு சாதாரண உணர்வை விட அதிகமானது. அது இன்று உலக அளவிலான வெற்றி கதையாக மாறியுள்ளது. இயற்கையை பாதுகாத்து, சமூக வளர்ச்சியையும் கொண்டு வந்த இந்த முயற்சி, ஒரு உணர்வின் மாபெரும் மாற்றம் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications