மாலத்தீவு: மாத சம்பளத்தில் வேலைக்கு செல்பவர்கள் அதனை விடுத்து ஒரு தொழில் தொடங்க வேண்டும் என நினைத்தால் நிச்சயம் இவருடைய கதை உங்களுக்கு ஊக்கம் அளிக்கும். மாலத்தீவின் அசைக்க முடியாத தொழிலதிபராகவும் பணக்காரராகவும் உயர்ந்திருக்கும் காசிம் இப்ராகிம்..
கிளார்க்காக தன்னுடைய வேலையை தொடங்கிய காசிம் இப்ராகிம் இப்போது பல லட்சம் கோடி பணத்திற்கு சொந்தக்காரராக இருக்கிறார். மாலத்தீவின் மிகப்பெரிய தொழிலதிபராக இவர் மாறியது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

காசிம் இப்ராஹிம் 1951 ஆம் ஆண்டு மாலத்தீவில் பிறந்தவர். தன்னுடைய 18ஆவது வயதில் மருத்துவமனை ஒன்றில் கிளார்க் பணியில் சேர்ந்தார். தற்போது மாலத்தீவின் பணக்காரர்களில் தவிர்க்க முடியாத நபராக மாறி இருக்கிறார் .1973 ஆம் ஆண்டில் தன்னுடைய கிளார்க் வேலையை விட்ட காசிம் இப்ராகிம் மரச்சாமான்கள் கடையில் மேலாண்மை பணிக்காக சென்றார். அப்போது பகுதி நேரமாக அரசுக்கு சொந்தமான ஒரு வர்த்தக நிறுவனத்திலும் இவர் வேலை செய்து வந்தார்.
அப்போதுதான் அவருக்கு நாம் சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாம். 1976 ஆம் ஆண்டில் சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்கிய காசிம் அரிசி, டீசல், மண்ணெண்ணெய் மற்றும் புகையிலை ஆகியவற்றைக் கொண்டு வர்த்தகத்தில் ஈடுபட தொடங்கினார். வெளிநாடுகளில் இருந்து அவற்றை மாலத்தீவுக்கு இறக்குமதி செய்வது தான் இவருடைய தொழில்.
படிப்படியாக தொழிலை கற்றுக் கொண்ட காசிம் சுற்றுலா மற்றும் போக்குவரத்து, கட்டுமானம், உற்பத்தி ,எரிவாயு, சிமெண்ட் என பல்வேறு துறைகளிலும் கால் பதிக்க தொடங்கினார். அந்த வகையில் காசிம் இப்ராகிமின் வில்லா ஷிப்பிங் அண்ட் டிரேடிங் கம்பெனி லிமிடெட் மாலத்தீவின் அசைக்க முடியாத ஒரு தொழில் குழுமமாக மாறியது.
இதற்காக எஸ்பிஐ வங்கியில் இருந்து 2000 டாலர்களை கடன் வாங்கினார். தன்னுடைய தொழிலை படிப்படியாக விரிவாக்கம் செய்தார். பழைய படகு ஒன்றினை வாங்கி அதனை சரக்கு கப்பலாக மாற்றிய இவர், சரக்கு போக்குவரத்து , இறக்குமதி ஆகியவற்றிலும் வெற்றிகரமாக செயல்பட தொடங்கினார். 1980களில் மாலத்தீவில் அரசியலிலும் கால் பதித்தார். 1989 ஆம் ஆண்டு மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டார்.
காசிம் மற்றும் அவருடைய நிறுவனம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அவை இவருடைய வளர்ச்சியை பாதிக்கவில்லை. 2005 ஆம் ஆண்டில் மாலத்தீவு நாட்டின் மத்திய வங்கி ஆளுநராகவும் இவர் நியமனம் செய்யப்பட்டார். தற்போது காசிம் இப்ராகிமின் குழுமம் 5 மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டதாக இருக்கிறது. அவருடைய சொத்து மதிப்பு மாலத்தீவு நாணயத்தில் 9.6 பில்லியன் ஆக இருக்கிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications