சென்னை: ஒரு சொந்த தொழிலை தொடங்கி பெரிய முன்னேற்றத்தை அடைந்த பல நபர்களின் புல்லரிக்க வைக்கும் கதைகளை நாம் சோசியல் மீடியாக்களில் பார்த்திருப்போம். அந்த வகையில் குஜராத்தைச் சேர்ந்த இளைஞர் தற்போது சொந்த தொழில் தொடங்கி மாதம் ரூ. 3 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகிறார். அவர் என்ன தொழில் செய்கிறார்? அவருக்கு இந்த சிந்தனை எப்போது வந்தது? என்பது போன்ற விவரங்களை இந்தக் கட்டுரையில் காண்போம்.
குஜராத்தில் வசிக்கும் தீரன் சோலங்கி என்பவர் 8 மாதங்களுக்கு முன்பு, கழுதை வளர்க்கும் தொழிலைத் தொடங்கினார். தற்போது இதன் மூலம் இவர் ஆன்லைனில், ஒரு லிட்டர் கழுதை பால் ரூ.5,000 என்ற விலையில் விற்பனை செய்து வருகிறார்.

குடும்பத்தை நடத்த நல்ல வேலை கிடைக்காததால், தீரன் சோலங்கி இந்தத் தொழிலைத் தொடங்கினார் எனக் கூறப்படுகிறது. அவர் குடும்ப சூழ்நிலைகளைச் சமாளிக்க சென்ற அனைத்து தனியார் நிறுவன வேலைகளும், அவருக்குக் கைக் கொடுக்கவில்லை. போதிய வருமானம் இல்லாதால் தீரன் இந்த கழுதை வளர்க்கும் தொழிலைத் தொடங்கியுள்ளார்.
தென்னிந்தியாவில் கழுதை வளர்ப்பது பொதுவாக சிலர் செய்யும் பிற தோழில்களைப் போலதான் என தெரிந்து கொண்டபின், அதனை முயற்சி செய்ய முடிவு செய்துள்ளார் தீரன். ஏறக்குறைய எட்டு மாதங்களுக்கு முன்பு, அவர் தனது சொந்த கிராமமான படானில் ஆரம்ப முதலீடாக ரூ. 22 லட்சத்தில், 20 கழுதைகளை வளர்க்கத் தொடங்கியுள்ளார்.
ஆரம்பத்தில், அதாவது சுமார் ஐந்து மாதங்களுக்கு, தீரனின் இந்த கழுதை வளர்ப்பு தொழிலில், எந்த வருமானத்தையும் அவர் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. குஜராத்தில் கழுதைப்பாலுக்கு கிராக்கி இல்லை என்பதால் தொடர்ந்து சில மாதங்களுக்கு எந்த வருமானமும் இல்லாமல் இருந்துள்ளார்.

அதன்பிறகு, தென் மாநிலங்களில், குறிப்பாக கர்நாடகா மற்றும் கேரளாவில், கழுதைப்பாலின் தேவை அதிகமாக இருக்கும். அதுவும் அழகுசாதன உற்பத்தியில் கழுதைப் பாலுக்கு அதிக தேவை இருக்கும். இதனை நோக்கமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியுள்ளார் தீரன்.
கழுதைப் பாலுக்கான விலை ஒரு லிட்டருக்கு ரூ. 5,000 முதல் ரூ. 7,000 வரை என்று நிர்ணயித்துள்ளார். மேலும், பசும்பால் லிட்டருக்கு ரூ. 65க்கு விற்பனை செய்யப்படுவதை விட கழுதைப் பாலின் விலை பன்மடங்கு அதிகமாகும்.
இதனைக் கருத்தில் கொண்டு தீரன் தன் தயாரிப்புகளை அதிகரித்துள்ளார். குறிப்பாக கழுதை பால் பால் பவுடர் 1 கிலோவின் விலை ரூ. 1 லட்சம் வரை ஆன்லைன் மூலமாக விற்று வருகிறார்.
தற்போது அவரிடம், 42 கழுதைகள் உள்ள நிலையில், அவர் இதுவரை சுமார் ரூ. 38 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது . பிற செய்தித் தரவுகளின் படி, தீரன் சோலங்கி இப்போது இந்தியாவின் தென் பகுதிகளில் உள்ள நுகர்வோருக்கு கழுதை பால் வழங்குவதன் மூலம் ரூ. 2 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை மாத வருமானம் ஈட்டி வருகிறார்.
More From GoodReturns

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

டாடா கெமிக்கல்ஸை ஓரங்கட்டிய 2 பங்குகள்! மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் செய்த அதிரடி முதலீடு!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

வாழ்க்கையை என்ஜாய் பண்ண சீக்கிரம் ரிடையர்மெண்ட்? மாதம் ரூ.75,000 டூ 1 லட்சம் பென்ஷன் வேண்டுமா?

ETF vs மியூச்சுவல் ஃபண்ட்: உங்கள் பணத்தை எதில் போட்டால் டபுள் லாபம்?

PPF கணக்கு ஆரம்பிக்க போறீங்களா? இந்த ஒரு தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க!

வெள்ளி 15% சரிவு.. தங்கம் 3% ஏற்றம்! குழப்பத்தில் முதலீட்டாளர்கள் - இப்போது என்ன செய்வது?



Click it and Unblock the Notifications