ஈரானில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு போர் தீவிரமடைய போகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். ஈரான், எதிரிகள் சரணடையும் வரை நாங்கள் போரை தொடர்வோம் என அறிவித்துள்ளது.
ஈரான் போர் ஏற்கனவே பல்வேறு நாடுகளிலும் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் கடுமையான பெட்ரோல் , டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை பல மடங்கு உயர்வு கண்டிருக்கிறது. பிலிப்பைன்ஸில் எனர்ஜி லாக்டவுன் அறிவிக்கப்பட்டு விட்டது. ஆஸ்திரேலியாவில் பொதுமக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இத்தகைய சூழலில் இந்தியாவைப் பொறுத்தவரை தற்போதைக்கு பெட்ரோல் டீசலுக்கு எந்த ஒரு தட்டுப்பாடும் இல்லை. தனியார் எண்ணெய் நிறுவனங்கள் மட்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்ந்தியுள்ளன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சாதாரண பெட்ரோல், டீசல் விலையில் இதுவரை கை வைக்கவில்லை.

எல்பிஜி பொறுத்தவரை வணிகப் பயன்பாட்டை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது, வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை பெருமளவில் உயர்த்தப்படவில்லை. அதே வேளையில் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்திற்கு தான் எண்ணெய் நிறுவனங்கள் முன்னுரிமை தந்த வண்ணம் இருக்கின்றன. அதாவது ஈரான் போர் நேரடியாக சாமானிய மக்களை பாதிக்க கூடாது என்பதில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மிக கவனமாக எடுத்து வருகிறது. ஆனால் உண்மையான பிரச்சனையே இனிமேல் தான் தொடங்கப் போகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு , அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு ஆகிய இரண்டும் இந்தியாவில் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் விலையை உயர்த்தும் என நுவாமா நிறுவனம் கூறி இருக்கிறது. குறிப்பாக புதிய நிதியாண்டு தொடங்கி இருக்கக்கூடிய சூழலில் அடுத்து வரக்கூடிய சில வாரங்களிலேயே இந்தியாவில் எஃப்எம்சிஜி நிறுவனங்கள் பல்வேறு பொருட்களின் விலைகளை உயர்த்தப் போகின்றன என தெரிவித்திருக்கிறது.
அதாவது பல்வேறு மூலப்பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால் பல்வேறு பொருட்களின் விலைவாசி மூன்றிலிருந்து நான்கு சதவீதம் வரை உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறது. சமையல் எண்ணெய், சோப்பு மற்றும் டிடர்ஜென்ட், பெயிண்ட் ஆகியவற்றின் விலை பெருமளவில் உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்திருக்கிறது. இந்த பொருட்களை தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதும் பேக்கேஜிங் கட்டணம் உயர்ந்திருப்பதுமே இதற்கு காரணம் என நுவாமா நிறுவனம் கூறியிருக்கிறது.

பல்வேறு பொருட்களின் உற்பத்தி செலவு 20% வரை உயர்வு கண்டிருப்பதால் நிறுவனங்கள் இந்த விலை உயர்வை மக்களின் மீது சுமத்த தயாராகி இருப்பதாக நுவாமா நிறுவனம் கூறுகிறது. ஆசியன் பெயிண்ட்ஸ், பெர்கர் பெயிண்ட்ஸ், டாபர், இமாமி போன்ற நிறுவனங்கள் தங்கள் பிராண்ட் பொருட்கள் விலையை இந்த மாத மத்தியிலேயே உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது ஒரு புறம் இருக்க ஈரான் போர் இந்தியாவின் இண்டர்நெட் இணைப்புக்கும் பிரச்சினை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. டிஜிட்டல் ரீதியிலான இணைப்புக்கு கடலுக்கு அடியில் போடப்பட்டு இருக்கக்கூடிய கேபிள் இணைப்புகள் தான் முக்கியம். சர்வதேச அளவிலான 99% இண்டர்நெட் டிராபிக் இந்த கேபிள்கள் மூலம் தான் கிடைக்கிறது. தற்போதைக்கு ஈரான் இந்த கேபிள் உள்கட்டமைப்புகள் மீது எந்த ஒரு தாக்குதலையும் நடத்தவில்லை. ஆனால் எதிர் வரக்கூடிய நாட்களில் இன்டர்நெட் இணைப்பு கேபில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலோ இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் இந்தியாவில் பெரும் அளவில் இன்டர்நெட் முடங்கும் அபாயம் ஏற்படலாம்.
செங்கடல் வழியாக வரக்கூடிய கேபிள்கள் சேதமடைந்தால் அதனை சரி செய்வதற்கு ஓராண்டு காலம் தேவைப்படும் என சொல்லப்படுகிறது. உடனடியாக பெரிய அளவில் இண்டர்நெட் முடக்கம் இல்லை என்றாலும் இண்டர்நெட் இணைப்பு தாமதமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாமலேயே போரை முடிக்க போகிறாரா டிரம்ப்? என்ன சொல்லி இருக்காரு பாருங்க!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

பக்ரைனில் ஈரானின் சைபர் போர்! அமேசான் கிளவுட் முடக்கம்? அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலா?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?



Click it and Unblock the Notifications

