ஓய்வூதிய அமைப்பான ஈபிஎப்ஓ அரசுடன் பல்வேறு ஆலோசனைக்குப் பின்பு மும்பை பங்குச்சந்தை மார்ச் சரிவில் இருந்து மீண்ட காரணத்தால் முன்பு அறிவிக்கப்பட்ட 2019-20ஆம் நிதியாண்டுக்கான 8.5 சதவீத வட்டி வருமானத்தைத் தனது 6 கோடி வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
ஈபிஎப்ஓ அமைப்பின் இந்த முடிவிற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஈபிஎப்ஓ 6 கோடி பிஎப் வாடிக்கையாளர்கள் கணக்கில் வட்டி வருமானத்தைச் செலுத்தத் துவங்கியுள்ளது.
இதன் மூலம் ஜனவரி 1 முதல் பலர் தங்களது கணக்கில் பிஎப் வைப்பு நிதிக்கான வட்டி வருமானத்தைப் பெறத் துவங்கியுள்ளனர்.
ஈபிஎப்ஓ அமைப்பு
இதுக்குறித்து ஈபிஎப்ஓ அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் 8.5 சதவீத வட்டி வருமானத்தை பிஎப் கணக்காளர்களுக்குச் செலுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து வியாழக்கிழமை முதல் கணக்காளர்களுக்கு வட்டி வருமானத்தை டெபாசிட் செய்யும் பணியைத் துவங்கியுள்ளோம்.
6 கோடி ஊழியர்கள்
மேலும் டிசம்பர் 31ஆம் தேதி ஓய்வு பெறும் ஊழியர்களும் முன்பு அறிவிக்கப்பட்ட 2019-20ஆம் நிதியாண்டுக்கான 8.5 சதவீத வட்டி வருமானத்தைப் பெறுவார்கள் என தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் கங்கவார் தெரிவித்துள்ளார்.
இதனால் 6 கோடி ஊழியர்கள் பலன் அடைய உள்ளனர்.
பங்கு விற்பனை
இந்த வருடம் முதல் முறையாகக் கொரோனா பாதிப்பின் காரணமாக மத்திய அரசு, ஈபிஎப்ஓ அமைப்பு முதலீடு செய்துள்ள பங்குகளை விற்பனை செய்ய முடியாத காரணத்தால் கடன் சந்தையில் செய்யப்பட்ட முதலீட்டில் கிடைத்த 8.15 சதவீத வட்டி வருமானத்தை மட்டும் முதலில் ஈபிஎப்ஓ கணக்கில் செலுத்தவும், மீதமுள்ள 0.35 சதவீத வட்டி வருமானத்தை இழப்புகளைக் கணக்கிட்டுச் செலுத்துவதாகச் செப்டம்பர் மாதம் அறிவித்தது.
பங்குச்சந்தை வளர்ச்சி
இதற்கிடையே பங்குச்சந்தையில் அன்னிய முதலீட்டாளர்களின் அதீத முதலீட்டின் காரணமாகச் சிறப்பான முதலீட்டைப் பெற்ற நிலையில் மத்திய அரசு ஈபிஎப்ஓ முதலீடு செய்துள்ள பங்குகளை விற்பனை செய்து முந்தை கணிப்பை விடவும் அதிகளவிலான லாபத்தைப் பெற்றது.
8.5 சதவீத வட்டி வருமானம்
இதன் காரணமாக மத்திய அரசு 6 கோடி பிஎப் வாடிக்கையாளர்களுக்கும் முன்பு அறிவிக்கப்பட்டதை போலவே 2019-20ஆம் நிதியாண்டுக்கான 8.5 சதவீத வட்டி வருமானத்தை முழுமையாகச் செலுத்தத் துவங்கியுள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications