Natarajan Chandrasekaran: நாமக்கல் மோகனூர் பையன்.. டாடா சன்ஸ் சேர்மன்.. 40 வருட டாடா குழும பந்தம் முடிகிறது!

டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ஆக இருக்கும் சந்திரசேகரன் தனது பதவியை ராஜினாமா செய்தது பெரும் அதிர்ச்சியை கொடுக்கும் வேளையில், இவருடைய 40 வருட பயணம் பலருக்கும் இன்று வரையில் பெரிய இன்ஸ்பிரேஷனாக உள்ளது.

சிறு கிராமம், தமிழ் வழி கல்வி, பெரும் பின்புலம் இல்லாத குடும்ப அமைப்பு... வெறும் கல்வியும், திறன் அடிப்படையில் மட்டுமே இந்த நாமக்கல் பையன் டாடா குழுமத்தின் மூத்த அதிகாரியாக உயர்ந்துள்ளார்.

Natarajan Chandrasekaran: நாமக்கல் மோகனூர் பையன்.. டாடா சன்ஸ் சேர்மன்.. 40 வருட டாடா குழும பந்தம் முடிகிறது!

சிறு கிராமம்

நாமக்கல் மாவட்டம், மோகனூர் என்னும் சிறிய கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் 1963 ஜூன் 2ஆம் தேதி பிறந்தார் சந்திரசேகரன். பள்ளிப்படிப்பை மோகனூரில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ் வழி கல்வியில் முடித்து கல்லூரிக்காக கோயம்புத்தூர் வந்தார்.

Also Read

கோவையில் தற்போது பிரபலமாக இருக்கும் Coimbatore Institute of Technology (CIT) கல்லூரியில் BSc Applied Sciences பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார் சந்திரசேகரன் . அதன் மேற்படிப்பிக்காக பின்பு திருச்சியில் இருக்கும் NIT-யில் கல்லூரியில் கணினி பயன்பாட்டியலில் (MCA) முதுகலை பட்டம் பெற்றார்.

Natarajan Chandrasekaran: நாமக்கல் மோகனூர் பையன்.. டாடா சன்ஸ் சேர்மன்.. 40 வருட டாடா குழும பந்தம் முடிகிறது!

சந்திரசேகரன் மோகனூர் சென்றிருந்த போது..

முதல் வேலை

திருச்சியில் படிப்பை முடித்ததும் 1987-ம் ஆண்டு அப்போது டாடா குழுமத்தில் சிறிய நிறுவனமாக இருந்த டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் ஒரு இன்டர்ன் (Intern) ஆக பணியில் சேர்ந்து, பின்பு சாஃப்ட்வேர் புரோகிராமராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் சந்திரசேகரன். இது தான் அவருடைய வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனையாக இருந்தது.

இண்டர்நெட் பூம், டாட் காம் பபுள், டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் என அனைத்தையும் பார்த்த சந்திரசேகரன் சுமார் 22 வருடம் தொடர்ந்து டிசிஎஸ் நிறுவனத்தில் பல்வேறு பதவியில் பணியாற்றினார். டிசிஎஸ் நிறுவனத்திலேயே தொடர்ந்து பணியாற்றி, படிப்படியாக உயர்ந்து 2009ல் டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றார்.

Natarajan Chandrasekaran: நாமக்கல் மோகனூர் பையன்.. டாடா சன்ஸ் சேர்மன்.. 40 வருட டாடா குழும பந்தம் முடிகிறது!

இந்த 22 ஆண்டுகளில் ரத்தன் டாடா-வின் நம்பிக்கையை பெற்றது மட்டும் அல்லாமல் அவருடைய நிர்வாகத்தின் ஸ்டைல், டிசிஎஸ் நிறுவனத்தை சந்திரசேகரன் வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்த வேகம் அனைத்தும் ரத்தன் டாடாவை இம்பிரஸ் செய்தது. இதன் ரியாக்ஷன் தான் 2017ல் நோயல் டாடாவை ஓரம்கட்டிவிட்டு 10 ஆண்டுகளில் டாடா சன்ஸ் தலைவராக சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்.

டாடா குடும்பத்தை சாராத, ரத்தம் அல்லது திருமண உறவு முறை எதும் இல்லாமல் வெளியில் இருந்து ஒரு நபரை டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்ற முதல் நபர் என்.சந்திரசேகரன் தான். தற்போது சந்திரசேகரனின் 40 வருட பணி காலம் டாடா குழுமத்தில் முடிகிறது.

Recommended For You

சந்திரசேகரனின் குடும்பம்

சந்திரசேகரனின் தந்தை எஸ்.நடராஜன் ஐயர் அவர் வழக்கறிஞர் மற்றும் விவசாயி ஆவார். இவரது தாயாரின் பெயர் மீனாட்சி. சந்திரசேகரனின் மனைவி லலிதா சந்திரசேகரன், இவர் கோட்டாக் மஹிந்திரா வங்கியின் மூத்த அதிகாரியாக இருந்தார். இவர்களுக்கு பிரணவ் என்ற மகன் உள்ளார்.

Natarajan Chandrasekaran: நாமக்கல் மோகனூர் பையன்.. டாடா சன்ஸ் சேர்மன்.. 40 வருட டாடா குழும பந்தம் முடிகிறது!

சந்திரசேகரன் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவர், இவரின் குடும்பத்தில் மொத்தம் 6 சகோதரன் மற்றும் சகோதரிகள் உடன் பிறந்த இவர், 3-வது மகன் ஆவார். சந்திரசேகரனுக்கு 2 மூத்த சகோதரர்கள், என். சீனிவாசன் இவர் முருகப்பா குழுமத்தின் மூத்த நிதி அதிகாரியாக பணியாற்றியவர். என். கணபதி சுப்பிரமணியன் இவர் TCS நிறுவனத்தின் முன்னாள் தலைமை இயக்க அதிகாரியாக இருந்தவர்.

Natarajan Chandrasekaran: நாமக்கல் மோகனூர் பையன்.. டாடா சன்ஸ் சேர்மன்.. 40 வருட டாடா குழும பந்தம் முடிகிறது!

இவர்களுடன் 3 சகோதரிகள் உள்ளனர் ராஜலட்சுமி ஈரோட்டிலும், காயத்ரி பெங்களூரிலும், நார்த்தாங்கி என்ற கடைசி சகோதரி சென்னையிலும் உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+