இன்போசிஸ் நிறுவனத்தில் ஆபீஸ் பாயாக இருந்தவர் தற்போது இரண்டு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்திருக்கிறார். வாழ்க்கையில் விடாமுயற்சியும் மன உறுதியும் இருந்தால் எத்தகைய உயரத்தையும் அடைய முடியும் என்பதற்கு உதாரணமான ஒரு நபரின் கதை தான் இது. மகாராஷ்டிரா மாநிலம் பீட் என்ற சிறிய கிராமத்தை சேர்ந்தவர் தான் தாதா சாகிப் பாகத். தன்னுடைய பள்ளிப் படிப்பையும் , ஐடிஐ டிப்ளமோ படிப்பையும் முடித்துவிட்டு தன்னுடைய கிராமத்திலிருந்து வேலை தேடி புனேவுக்கு இடம் பெயர்ந்தார்.
அங்கே தன்னுடைய அன்றாட செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வந்தவர் தனக்கு கிடைத்த வேலைகளை எல்லாம் செய்தார். அப்படித்தான் இன்போசிஸ் நிறுவனத்தில் ரூம் சர்வீஸ் பாயாக அவர் பணியாற்றினார். அப்போது அவருக்கு மாத ஊதியம் 9,000 ரூபாய். இப்படி வேலை பார்த்துக் கொண்டே மாலையில் அனிமேஷன் கற்றுத்தரும் வகுப்புகளுக்கு சென்றார்.

இந்த முடிவு தான் அவர் வாழ்க்கையை மாற்றியது. அனிமேஷன் படிப்பை முடித்தவுடன் வேலை கிடைத்து ஹைதராபாத்தில் குடிபெயர்ந்தார். டிசைன் மற்றும் கிராபிக்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வந்த இவர் அத்துடனே பைத்தான் மற்றும் சி++ ஆகிய கணினி மொழிகளை கற்றுக் கொண்டார். மேலும் தனக்கே உரிய பாணியில் விஷுவல் எஃபக்டுகளை உருவாக்கி ஆன்லைனில் அவற்றை விற்பனை செய்ய தொடங்கினார். இப்படித்தான் அவருடைய தொழில் வளர தொடங்கியது. இவர் நார்னியா, ஸ்டார்வார் உள்ளிட்ட பல்வேறு படங்களில் அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் பிரிவுகளில் பணியாற்றியுள்ளார்.
இதனை அடுத்து ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் எல்லாம் இவர் பணி செய்து இருக்கிறார். 2015 ஆம் ஆண்டு திடீரென இவருக்கு கார் விபத்து ஏற்பட்டது அந்த சமயத்தில் ரெஸ்ட்டில் இருந்த இவர் ஃப்ரீலான்ஸ் முறையில் பணிகளை செய்யத் தொடங்கினார். இது அவருக்கு நல்ல வருவாயை பெற்று தந்தது. எனவே Ninthmotion, மோஷன் என்ற பெயரில் ஒரு அனிமேஷன் நிறுவனத்தை தொடங்கினார். இவரது அனிமேஷன் நிறுவனம் பிபிசி ஸ்டுடியோஸ் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு எல்லாம் ப்ராஜெக்டுகளை செய்து தந்துள்ளது.
இந்த பணி அனுபவத்தின் மூலம் DooGraphics என்ற ஒரு தளத்தையும் இவர் உருவாக்கினார். இது கேன்வாவை போன்ற ஒரு தளமாகும். கிட்டத்தட்ட ஆறு மாதங்களிலேயே DooGraphics தளத்தில் சுமார் 10,000 பயனாளர்கள் இணைந்து பயன்பெற தொடங்கினர். தற்போது DooGraphics சுமார் ஒரு ஒரு லட்சம் பயனாளர்களை கொண்டுள்ளது. சுமார் 1000 பேர் இதன் மூலம் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர். இந்த நிறுவனம் ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது.
தான் கஷ்டப்பட்டு வளர்ந்த கிராமத்தில் இவர் தான் இப்போது ஹீரோ. அண்மையில் கூட இவர் ஷார்க் டேங்க் இந்தியா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமன் குப்தாவிடமிருந்து ஒரு கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை ஈர்த்தார்.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications