ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் ரூ.35 லட்சம் சேமிப்பு.. எப்படி சாத்தியம்.? வெற்றிக்கான ரகசியம் இதுதான்..!

ஒரு நபர் குறைந்த வருமானத்தில் இருந்து முதலீட்டின் மூலம் எப்படி பெரும் செல்வத்தை உருவாக்கியுள்ளார் என்பதைக் காட்டும் ரெடிட் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் மத்தியில் விவாதத்தை கிளப்பியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பட்டம் பெற்ற இளைஞர் ஒருவர், தொடக்கத்தில் நல்ல வேலையின்றி சிரமப்பட்டார். பின்னர், மாதம் ரூ.20,000 சம்பளத்தில் ஒரு மனிதன் குறைந்த வருமானத்தில் இருந்து சரியான முதலீட்டின் மூலம் எவ்வாறு பெரும் செல்வத்தை உருவாக்கியுள்ளார் என்பதைக் காட்டும் வைரல் ரெடிட் பதிவு சமூகவலைதளங்களில் பரவலாக பகிரப்படுகிறது.

வாடிக்கையாளர் சேவை துறையில் பணிக்கு சேர்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவருக்கு குர்கானில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மாதம் ரூ.65,000 சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஆனால், அவர் ராய்ப்பூரிலேயே இருந்து தொலைதூரமாக வேலை செய்தார்.

ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் ரூ.35 லட்சம் சேமிப்பு.. எப்படி சாத்தியம்.?  வெற்றிக்கான ரகசியம் இதுதான்..!

தனது குடும்பத்துடன் வசித்து வந்த இவர், மாதம் ரூ.5,000 மட்டுமே தனிப்பட்ட செலவுகளுக்கு பயன்படுத்தி வந்தார். ஆடம்பரங்கள் எதுவும் இல்லாத வாழ்க்கை முறை அவரது சேமிப்புகளுக்கு அடித்தளம் போட்டது. 2021 முதல் மியூச்சுவல் ஃபண்டுகளில் (Mutual Funds) முதலீடு செய்து வந்த அவர், இன்று ரூ.35 லட்சம் மதிப்புள்ள தனிப்பட்ட முதலீட்டு போர்ட்ஃபோலியோவை (portfolio) உருவாக்கியுள்ளார். பிறகு, அவரது தந்தையின் பெயரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள SIP (Systematic Investment Plan) முதலீடும் உள்ளது.

சம்பள உயர்வு, புதிய போன், செலவுகளுக்கான வசதிகள் போன்றவற்றை எதிர்பார்க்காமல், 5 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ரூ.9,000 மதிப்புள்ள Redmi ஸ்மார்ட்போனை இன்னும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்தக் கதையைப் பகிர்ந்த சமூக ஊடக பயனாளர்கள், "தாழ்வான வருமானத்திலேயே உயர் சேமிப்பு சாத்தியம்", "ஒழுக்கமான திட்டமிடல் இருந்தால் கோடீஸ்வரனாக மாறலாம்" என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறைந்த வருமானத்தில் அதிக சேமிப்பை காட்டும் ரெடிட் பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது தனிநபரின் ஒழுக்கம் காரணமா, இல்லை அவருக்கு கிடைத்த சில சலுகைகள் காரணமா என்பது குறித்து வாடிக்கையாளர்கள் விவாதித்து வருகின்றனர். அதன்படி ஒரு பயனர், "உங்களுக்கு சொந்த வீடு இருந்தால், இன்ஸ்டாகிராமில் விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் காட்டாமல் இருந்தால், இந்த நாட்டில் மாதம் ரூ.40,000 செலவில் மகிழ்ச்சியாக வாழ முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

மற்றொருவர், "உங்கள் சம்பளத்தில் 90% சேமிப்பு வைப்பது அனைவருக்கும் சாத்தியமல்ல. இது ஒரு வகை ஆடம்பரமாகவே இருக்கிறது. மேலும், இந்தக் குடும்பம் எந்த வருமான வரியையும் செலுத்தவில்லை என்பதுடன், பல அரசு நலத்திட்டங்களின் நன்மைகளை எளிதாகப் பெறும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடல், ஒருவரது வெற்றியை நம் சொந்த சூழ்நிலைகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டியதுண்டு என்பதையும், ஒரே மாதிரியான சேமிப்பு திட்டம் எல்லோருக்கும் பொருந்தாது என்பதையும் வெளிப்படுத்துகிறது.

மற்றொரு நபர், "இந்தியா போன்ற நாட்டில், நீங்கள் சராசரியை விட சற்றே அதிகமாக சம்பாதிக்கிறீர்கள் மற்றும் நல்ல சமூக தொடர்புகளைக் கொண்டிருந்தால், வாழ்க்கை ஒப்பீட்டளவில் சீராக இருக்கும். சிலர் மாதம் ரூ.2 முதல் ரூ.3 லட்சம் சம்பாதிக்கிறார்கள், நேர்மையாக வாழ்கிறார்கள். ஒருவர் ரூ.75,000 சம்பாதித்தாலும், புத்திசாலியாகவும், சமூக விழிப்புணர்வுடனும், சட்டம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் நம்பகமான தொடர்புகளைக் கொண்டிருந்தால், அவர்கள் வாழ்க்கையை எளிதாக மேம்படுத்த முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறான வாழ்க்கைத் திறமைக்கு "ஜுகாத் (Jugaad)" எனப் பெயர். குறைவான வளங்களோடு புத்திசாலித்தனமாக வாழ்க்கையை நெறிப்படுத்தும் இந்த திறமை, இந்தியா போன்ற நாடுகளில் வாழ்க்கையை சீராக்கும் முக்கிய கருவியாக பார்க்கப்படுகிறது. இந்த கருத்து சமூக வலைதளங்களில் பலரால் ஆதரிக்கப்படுவதுடன், உண்மையில் வாழ்க்கையில் செலவுகளை மட்டும் கவனித்தல் போதாது, வாழ்க்கையை மென்மையாக கொண்டு செல்ல உறவுகள், அறிவு மற்றும் ஒழுங்குமுறை புரிதலும் அவசியம் என்பதை நினைவூட்டுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+