சிலருக்கு எதிர்பாராத விதமாக அதிர்ஷ்டம் கதவைத் தட்டும். அப்படித்தான் கிரிக்கெட் ஃபேண்டஸி அப்ளிகேஷனான ட்ரீம் 11 மொபைல் ஆப் மூலம் விவசாயி மகன் ஒருவர் ரூ.4 கோடி வென்றுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் கௌசாம்பியைச் சேர்ந்த மங்கள் சரோஜ் என்பவர் ட்ரீம் 11 கிரிக்கெட் ஆப்-பில் வெறும் 39 ரூபாய் செலுத்தி, ஒரே இரவில் பணக்காரராக மாறியுள்ளார்.
மங்கள் சரோஜ் தனது வங்கிக் கணக்கில் இருந்த, 39 ரூபாயை முதலீடு செய்துள்ளார். இந்த சொற்பத்தொகை அவருடைய வாழ்க்கையையே மாற்றப் போகிறது என்பது அப்போது அவருக்கு தெரியவில்லை. கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி அன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தான் மங்கள் ரூ. 4 கோடி வென்றுள்ளார். அப்போது பஞ்சாப் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை உறுதிப்படுத்தும் விதமாக மங்கள் சரோஜின் மொபைலுக்கு ஒரு SMS வந்துள்ளது. அதில் அவர் ரூ. 4 கோடி வென்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த மங்கள் சரோஜ், கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படும் பிளைவுட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் பிறந்தவர்கள் 5 சகோதரர்கள். 2 சகோதரிகளும் உள்ளனர். 2017-ஆம் ஆண்டு திருமணமான மங்கள் சரோஜுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார்.
மங்கள் சரோஜ்-இன் தந்தையான சுக்லா சரோஜ் ஒரு நிலத்தை குத்தகை எடுத்து அதில் விவசாயம் செய்து வரும் விவசாயி. இவர் விளையும் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கை நில உரிமையாளருக்கு பகிர்ந்து வருகிறார். மீதமுள்ளதைப் பயன்படுத்தி அவற்றை விற்பனை செய்து, தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இந்நிலையில் மங்கள் சரோஜ் பெற்றிருக்கும் வெற்றி அவருடைய குடும்பத்திற்கு மட்டுமின்றி அவர் வசிக்கும் முழு கிராமத்திற்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற அப்ளிகேஷன் மூலமாக கிடைக்கும் வெற்றிகள் அரிதான நிகழ்வு என்பதை அனைவரும் உணர வேண்டும். விளையாட்டு அப்ளிகேஷன் பொழுதுபோக்கிற்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை. இதில் அதிக லாபம் ஈட்ட முடியும் என்ற எண்ணத்தில் அதிக அளவிலான தொகைகளை முதலீடு செய்வது ஆபத்தில் முடியலாம்.
ட்ரீம் 11 போன்ற விளையாட்டுகளில் வெற்றி பெறுவது என்பது முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தை மட்டுமே சார்ந்தது. திறமை வேண்டும் என்றாலும் எல்லோருக்கும் இதே போன்ற வெற்றிகள் கிடைத்துவிடும் என்று கூறி விட முடியாது. பலர் இது போன்ற அப்ளிகேஷன்களில் பணத்தை இழந்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நம் நாட்டில் அரங்கேறியுள்ளது.
சிலர் வங்கி கடன், குடும்பத்தினரிடம் கடன் பெற்று முழுவதுமாக முதலீடு செய்து விட்டு தோல்வி அடைந்து மன அழுத்தத்தோடு தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் அவர்கள் மட்டுமின்றி அவர்களுடைய குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் இது போன்ற வெற்றிகளை பார்த்து ஏமாறாமல் கடின உழைப்பிலும் சரியான திட்டமிடலிலும் நம்பிக்கை வையுங்கள்! பொழுதுபோக்கிற்காக மட்டுமே இது போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்துங்கள்! பணம் சம்பாதிக்க அல்ல!
More From GoodReturns

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: முகேஷ் அம்பானிக்கு கிடைத்த அட்சய பாத்திரம்!! ஒவ்வொரு நொடிக்கும் காசு!!

தோனி-க்கு நிகராக சஞ்சு சாம்சன்.. குரு சிஷ்யன் என்றால் சும்மாவா..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications