ஐடி மற்றும் டெக் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு மிக மோசமான ஒரு ஆண்டாக மாறியிருக்கிறது. டெக் நிறுவனங்கள் தங்களுடைய அன்றாட வேலைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
கூகுள், மெட்டா போன்ற பெரிய நிறுவனங்கள் அனைத்துமே தங்களுடைய நிறுவனங்களில் கோடிங் வேலைகளை ஏஐ கருவிகள் வசம் ஒப்படைத்து விட்டதாக வெளிப்படையாகவே அறிவித்துவிட்டன . ஊழியர்களும் தங்களுடைய அன்றாட பணிகளில் கட்டாயம் ஏஐ கருவிகளை பயன்படுத்த வேண்டும் என உத்தரவும் பிறப்பித்திருக்கின்றன.

இந்த ஏஐ தொழில்நுட்பத்தின் வருகை மனிதர்களின் வேலை வாய்ப்பை மிக வேகமாக பறித்து வருகிறது. 2025 ஆம் ஆண்டில் மட்டும் உலகின் முன்னணி நிறுவனங்களான மெட்டா, அமேசான், டிசிஎஸ் உள்ளிட்டவை ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி உள்ளன. டெக் துறையில் ஏஐ தொழில்நுட்பத்தால் நிகழும் தானியங்கி முறை மாற்றமே இந்த பணி நீக்கத்திற்கு மிக முக்கிய காரணம்.
Layoff.fyi என்ற தளம் உலகம் முழுவதும் 212 டெக் நிறுவனங்கள் 91,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாக தெரிவிக்கிறது. ஆனால் உண்மையில் இந்த எண்ணிக்கை இதில் காட்டப்படுவதை விட அதிகமாக தான் இருக்கும் .பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்கள் பணி நீக்கம் தொடர்பான உண்மையான எண்ணிக்கையை அறிவிக்கவில்லை என்பதால் உண்மையில் வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்திருக்கும்.
ஏஐ தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்ததால் அந்த வேலையில் இருந்த மனிதர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுகிறார்கள், மற்றொரு புறம் ஏஐ நுட்பங்களை கற்று பயன்படுத்தும் திறன் இல்லாதவர்கள் என கருதப்படுபவர்கள் நீக்கப்படுகிறார்கள். சில நிறுவனங்கள் ஏஐ பிரிவில் வேலை செய்பவர்களையும் கூட நீக்கி வருகின்றன.
மெட்டா: மெட்டா நிறுவனம் தங்களுடைய ஏஐ பிரிவை வலுப்படுத்துவதற்காக தேடி தேடி ஆட்களை பணிக்கு அமர்த்தியது . இதற்காக சூப்பர் இன்டெலிஜென்ஸ் என்ற ஒரு தனி பிரிவையே உருவாக்கியது . ஆனால் கூடிய விரைவில் இந்த பிரிவில் வேலை செய்யக்கூடிய 600 பேரை வேலையில் இருந்து நீக்க இருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்திருக்கிறது . ஏப்ரல் மாதத்தில் சுமார் 3,000 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக தெரிவித்தது. மெட்டா நிறுவனம் 2022 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை சுமார் 30000 பேரை பணியில் இருந்து நீக்கி இருக்கிறது.
அமேசான்: உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் தங்கள் ஊழியர்களின் பெரும்பாலானவர்களை வேலையில் இருந்து நீக்க இருக்கிறது . அமேசான் நிறுவனத்தை பொருத்தவரை பெரும்பாலான வேலைகளை தானியங்கி முறைக்கு மாற்றி வருகிறது. குறிப்பாக ரோபோடிக்ஸ் மற்றும் ஜெனரேட்டிவ் ஏஐ பிரிவில் அதிக அளவு முதலீடு செய்திருக்கும் அமேசான் நிறுவனம் கூடிய விரைவில் தங்களுடைய கிடங்குகளில் மனிதர்களுக்கு மாற்றாக ரோபோக்களை வேலைக்கு அமர்த்த இருக்கிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வேலை வாய்ப்பு பறிபோக இருக்கிறது. அமேசான் நிறுவனம் ஹெச்.ஆர் பிரிவில் வேலை செய்யும் 15 சதவீத ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்திருக்கிறதாம்.
மைக்ரோசாப்ட்: மற்றொரு முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாப்ட் தங்கள் ஊழியர்களை சுமார் 15,000 பேரை வேலையில் இருந்து நீக்கி இருக்கிறது .விற்பனை, மார்க்கெட்டிங் பொறியியல் என பல்வேறு பிரிவுகளை சேர்ந்த ஊழியர்களும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் தங்கள் ஊழியர்களில் 25 ஆயிரம் பேரையும், சேல்ஸ் ஃபோர்ஸ் நிறுவனம் 8000 பேரையும் வேலையில் இருந்து நீக்கி இருக்கிறது.
டிசிஎஸ்: அக்செஞ்சர் நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்துடன் தகவமைத்து கொள்ள முடியாத 11 ,000 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. பணிநீக்கம் வெளிநாடுகளில் மட்டுமல்ல இந்தியாவில் நடக்கிறது. பிரபல ஐடி நிறுவனம் தங்கம் ஊழியர்களில் 2 சதவீதம் அதாவது 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் செப்டம்பர் மாத காலாண்டில் நிறுவன ஊழியர்களில் 19,000 பேர் குறைந்துள்ளனர்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications