அமெரிக்கா: ஐடி நிறுவனங்களில் லட்சக்கணக்கில் ஊதியத்துடன் வேலை கிடைக்கிறது. ஆனால் அந்த வேலைக்கு உத்தரவாதம் இல்லை. ஏனெனில் ஐடி நிறுவனங்கள் திடீரென தங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிவிடுகின்றன.
நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை திடீரென பணியிலிருந்து நீக்கும் , அவர்கள் அடுத்து என்ன செய்வதென்றே தெரியாத நிலைக்கு சென்றுவிடுகின்றனர். நல்ல ஊதியம் அளித்து வந்த ஒரு வேலையிலிருந்து நீக்கப்படும் போது அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே தேங்கி விடுகின்றனர். ஆனால் அப்படி ஒரு பணி நீக்கம் தான் இந்த பெண்மணியை பல உயரங்களுக்கு கொண்டு சென்றுள்ளது.

இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்தான் பிரியங்கா நாயக். இவர் அமெரிக்காவில் ஐடி பிரிவில் கல்வி பயின்றவர். தற்போது விருது பெற்ற சமையல் கலைஞராக மாறியிருக்கிறார் .இதற்கு முன்னதாக தகவல் தொழில்நுட்பம் தான் இவருடைய தொழிலாக இருந்தது. முன்பு டிவிட்டர் என அறியப்பட்ட தற்போது எக்ஸ் என அழைக்கப்படும் எலான் மஸ்கிற்கு சொந்தமான நிறுவனத்தில் மென்பொறியாளராக பணி புரிந்தவர்.
அதற்கு முன்பு ப்ளூம்பெர்க் உள்ளிட்ட பல்வேறு பெரு நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தவர்தான் பிரியங்கா. கடந்த 2022 ஆம் ஆண்டு எலான் மஸ்க் தலைமையிலான எக்ஸ் நிறுவனம் இவரை திடீரென வேலையில் இருந்து நீக்கியது.
ஐடி துறையில் வல்லுனராக இருக்கும் இவர் வேறு நிறுவனங்களுக்கு சென்று இருந்தால் அதைவிட கூடுதல் ஊதியத்தில் வேலை கிடைத்திருக்கும். ஆனால் ஐடி வேலையை விடுத்து முழுக்க முழுக்க புதிய ஒரு தொழிலில் கால் பதித்தார். அதுதான் சமையல் கலைஞர்.
சமையல் மீது தனக்கு அதிக ஆர்வம் இருந்ததால் சமையலில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்து தொடங்கினார். இதனைத் தொடர்ந்து சைவம் சார்ந்த உணவுகளை வித்தியாசமான முறையில் தயாரிக்க தொடங்கினார் . செஃப்பிரியங்கா என்ற ஒரு சமூக ஊடகப் பக்கத்தை தொடங்கினார். தொடர்ந்து இவர் பல்வேறு சமையலையும் செய்து அந்த வீடியோவை பகிர்ந்தார்.
அது மட்டுமில்லாமல் பல்வேறு பிரபலங்களையும் தன்னுடைய வீடியோவில் பங்கேற்க செய்தார். இதன் மூலம் இவர் இன்னும் பிரபலமானார். தற்போது உலகிலேயே சமூகவலைதளங்களில் பலர் பின்பற்றி வரக்கூடிய ஒரு சமையல் கலைஞர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.
இவர் தன்னுடைய சமையல் வீடியோக்கள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் பிரமோஷன் மூலம் மட்டும் பல லட்சங்களை சம்பாதித்து வருகிறார்.
அண்மையில் அமெரிக்க அதிபர் மாளிகை என அறியப்படும் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிடத் தகுந்த 600 இந்திய அமெரிக்கர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் செஃப் பிரியங்காவும் ஒருவர்.
Story written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications