இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகி நடைமுறைக்கு வர உள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் 14 முறை தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு 2030 ஆம் ஆண்டு 120 பில்லியன் டாலர்களாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு பல்வேறு வழிகளிலும் பலனளிக்கும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக துணிமணி, வாகன உதிரி பாகங்கள், ஐடி சேவைகள், மருந்து, நகைகள் மற்றும் ரத்தினங்கள் ,தோல் மற்றும் பொறியியல் சரக்குகள் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவில் வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் எல்லாம் பிரிட்டன் சந்தையில் எந்தவித வரியும் இல்லாமல் நேரடியாக கால் பதிக்க முடியும்.

பிரிட்டனிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்களுக்கு 100% வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 10 சதவீதமாக குறையும். இதன் காரணமாக பிரிட்டனிலிருந்து நாம் இறக்குமதி செய்து வாங்கக்கூடிய வாகனங்களின் விலை குறையும். இதனால் இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் ,ஈச்சர் மோட்டார்ஸ், டிவிஎஸ் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பலன் பெற இருக்கின்றன.
டாடா மோட்டார்ஸ், ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தோடு கூட்டு ஒப்பந்தம் செய்து அந்த நிறுவன இந்தியாவில் விற்பனை செய்கிறது. ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனம் ராயல் என்ஃபீல்ட் வாகனங்களை விற்பனை செய்கிறது. எனவே இந்தியாவில் இந்த வகை வாகனங்களின் விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.
ஐடி துறையை பொருத்தவரை இந்தியாவை சேர்ந்த ஐடி நிறுவனங்கள் எளிமையாக பிரிட்டனை சேர்ந்த நிறுவனங்களுக்கு சேவை வழங்க முடியும். இதன் காரணமாக இந்தியாவை சேர்ந்த 60,000 ஐடி துறை ஊழியர்கள் பலன் பெறுவார்கள் என சொல்லப்படுகிறது. டிசிஎஸ், டெக் மகேந்திரா, இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் பலன் பெற இருக்கின்றன.
மருத்துவத்துறையை பொறுத்தவரை இந்தியாவை சேர்ந்த மருந்து நிறுவனங்கள் பிரிட்டனுக்கு மருந்துகளை இறக்குமதி செய்வது எளிமையாக்கப்படும் . டாக்டர் ரெட்டீஸ், சிப்லா , சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்கள் இதன் மூலம் பலன் பெற இருக்கின்றன. இந்தியாவில் இருந்து பிரிட்டனில் இறக்குமதி செய்யப்படும் தேயிலை, மசாலா பொருட்கள் மற்றும் ரெடு டூ ஈட் வகையிலான பொருட்களின் விலை பிரிட்டனில் குறையும். இதனால் இந்தியாவை சேர்ந்த உற்பத்தியாளர்கள் அதிக எண்ணிக்கையில் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். டாடா கன்சியூமர் ப்ராடக்ட்ஸ் , நெஸ்ட்லே இந்தியா, ஹிந்துஸ்தான் ஃபுட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இதன் மூலம் பலன் பெற இருக்கின்றன.
தடையற்ற வர்த்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நகை மற்றும் ரத்தினங்களின் மதிப்பு அதிகரிக்கும். இதனால் டைட்டன் கம்பெனி, கல்யாண் ஜுவல்லர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பலன் பெற இருக்கின்றன. பிரிட்டனில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் விஸ்கி மற்றும் ஜின் உள்ளிட்ட மதுபானங்களின் விலை குறையும். அதேபோல பிரிட்டனிலிருந்து நாம் இறக்குமதி செய்யக்கூடிய சாக்லேட் பிஸ்கட், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலையும் குறையும். பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருத்துவ சாதனங்களின் விலை குறையும்.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications