கொரோனா வந்தாலும் வந்தது மாடி வீட்டு அம்பானி முதல் ரோட்டுக்கடை முனுசாமி வரை பதம் பார்த்து விட்டது என்று தான் கூற வேண்டும்.
இது இன்னும் மக்களை வாட்டி வதைக்கும் விதமாக இன்றோடு 12 நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இனி வண்டி வாகனங்களில் வேலைக்கு செல்லும் சாமனியர்களின் நிலைமை என்ன ஆகுமோ தெரியவில்லை. ஏனெனில் லிட்டருக்கு 6 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ள நிலையில், மாதம் இதற்கென கூடுதலாக ஒரு தொகையினை செலவிட வேண்டியிருக்கும்.
கச்சா எண்ணெய் விலை
இதில் வேடிக்கை என்னவெனில் பெட்ரோல் விலையானது 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை தொட்டுள்ளது. கடந்த மாதத்தில் கொரோனாவின் காரணமாக முடங்கி போன சர்வதேச நாடுகளால் கச்சா எண்ணெய் விலையானது மைனஸில் சென்று பின் ஏற்றம் கண்டது.
விலை அதிகரிப்பு
இந்த நிலையில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ள நிலையில், பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் காரணத்தால் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மீண்டும் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு கிட்டதட்ட 40 டாலர்களை தொட்டுள்ளது.
என்ன காரணம்?
இதனால் கச்சா எண்ணெய் விலையானது அதிகரிக்க இது காரணமாக அமைந்தது. இன்னும் இதனை தெளிவாக சொல்ல வேண்டுமெனில் கச்சா எண்ணெய் தேவையானது குறைந்த நிலையில், உற்பத்தியும் குறைக்கப்பட்டது. ஆனால் தற்போது தேவையும் அதிகரித்து வரும் நிலையில், உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதால் விலையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கிடு கிடுவென ஏற்றம்
கச்சா எண்ணெய் விலையானது அந்தளவு மைனஸில் சென்ற போது கூட, எரிபொருள் விலைகள் குறையவில்லை. இந்த நிலையில் தற்போது கச்சா எண்ணெய் விலை ஏற்றம் காண ஆரம்பித்த நிலையில், பெட்ரோல் டீசல் விலையானது கிடு கிடுவென ஏற்றம் கண்டு கொண்டு இருக்கிறது.
கடந்த 12 நாட்களில் டீசல் விலையானது 7.04 ரூபாயும், இதே பெட்ரோல் விலையானது 6.55 ரூபாயும் ஏற்றம் கண்டுள்ளது.
இன்றைய விலை நிலவரம்:
டெல்லியில் பெட்ரோல் விலையானது 77.81 ரூபாயாகவும், டீசல் விலையானது 76.43 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதே குர்கானில் பெட்ரோல் விலையானது 76.24 ரூபாயாகவும், டீசல் விலையானது 69.08 ரூபாயாகவும் உள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலையானது 81.32 ரூபாயாகவும், டீசல் விலையானது 74.70 ரூபாயாகவும் உள்ளது.
மும்பையில் பெட்ரோல் விலையானது 84.66 ரூபாயாகவும், டீசல் விலையானது 74.93 ரூபாயாகவும் உள்ளது.
ஹைத்ராபாத்தில் பெட்ரோல் விலையானது 80.77 ரூபாயாகவும், டீசல் விலையானது 74.70 ரூபாயாகவும் உள்ளது.
பெங்களுவில் பெட்ரோல் விலையானது 80.33 ரூபாயாகவும், டீசல் விலையானது 72.68 ரூபாயாகவும் உள்ளது.
More From GoodReturns

தீவிரமடையும் சிலிண்டர் தட்டுப்பாடு: அவசர ஆலோசனை நடத்திய மோடி.. கமிட்டி அமைத்த மத்திய அரசு..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

OMCs பங்குகளுக்கு செக் வைத்த கச்சா எண்ணெய்! BPCL,HPCL பங்குகள் கடும் வீழ்ச்சி:யுபிஎஸ் கொடுத்த ஷாக்!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ரிலையன்ஸ் முதல் ஜேகே டயர்ஸ் வரை..அடி வாங்கும் முக்கிய பங்குகள்! உங்க லிஸ்டில் ஏதும் இருக்கா?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் முக்கிய அப்டேட்

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

50 பைசா சரிவு.. ஆடிப்போன இந்தியா.. ஈரான் போரால் இனி என்னவெல்லாம் நடக்குமோ..?!

SBI முதல் BoB வரை..பொதுத்துறை வங்கி பங்குகளில் ஏன் ரத்த ஆறு? முக்கிய காரணங்கள்இதோ?



Click it and Unblock the Notifications