திவாலாகும் பியூச்சர் ரீடைல்.. கிஷோர் பியானி சாம்ராஜ்ஜியம் வீழ்ந்தது..?!
இந்தியாவின் முன்னணி ரீடைல் வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான பியூச்சர் ரீடைல் நிறுவனம் அதிகப்படியான கடனில் மூழ்கியிருக்கும் நிலையில் வர்த்தகத்தை விற்பனை செய்ய முடிவு செய்தது.
இந்த முயற்சியில் கிஷோர் பியானி தலைமையிலான பியூச்சர் குரூப் அனைத்து வர்த்தகத்தையும் நிறுவனத்தையும் ரிலையைன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளைச் செய்து வந்த போது,அமேசான் தனது முதலீட்டு விதிமுறையை மீறியுள்ளதாகக் குற்றம்சாட்டி இந்தியாவிலும், சிங்கப்பூரிலும் வழக்குத் தொடுத்தது.
இந்த வழக்கு 2020 முதல் நடந்து வரும் நிலையில் எவ்விதமான தீர்வும் எடுக்கப்படவில்லை, இந்த நிலையில் பியூச்சர் குரூப் பல கடைகளை ரிலையன்ஸ் ரீடைல்-யிடம் இழந்து, வர்த்தகத்தை மொத்தமாக இழந்து தற்போது வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் உள்ளது.
{photo-feature}


Click it and Unblock the Notifications