ஒரு வீட்டில் ஒரு விசேஷம் இருந்தால் அங்கு மகிழ்ச்சியும் பண வரவும் இருக்கும். அதேபோல் ஒரு நாட்டில் மிகப் பெரிய சர்வதேச நிகழ்வு நடைபெற்றால் அதனால் பொருளாதார வளர்ச்சியும், வியாபாரம் அதிகரித்தலும் ஏற்பட்டு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள்தான். இதுதான் உலக இயல்பு.
ஆனால் புதுடெல்லியில் நடைபெறவிருக்கும் ஜி20 உச்சி மாநாட்டுக்காக அங்குள்ள பிரபலமான முக்கியமான கன்னாட் பிளேஸ் கான் மார்க்கெட்டை 3 நாட்கள் மூடுவதற்கு இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் மொத்தம் ரூ.450 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று அந்த மார்க்கெட்டை சேர்ந்த வியாபாரிகள் சோகத்துடன் புலம்புகின்றனர்.

அண்மையில் கன்னாட் பிளேஸ் மார்க்கெட்டை ரூ.3 கோடி செலவில் புதுப்பித்த மத்திய அரசு இப்போது அந்த மார்க்கெட்டில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களையும் கடைகளையும் மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது வியாபாரிகள் இடையே கடும் அதிர்ச்சியை அடைந்துள்ளனர்.
செப்டம்பர் 8(நாளை) முதல் 10 ஆம் தேதி வரை ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மூன்று நாட்களில் கான் மார்க்கெட்டில் எந்த வியாபாரமும் நடைபெறாது என்பதால் தங்களுக்கு ரூ.350 முதல் ரூ.450 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று மார்க்கெட் வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
உச்சி மாநாட்டையொட்டி கன்னாட் பிளேஸ் மார்க்கெட் மட்டுமல்லாமல் புது டெல்லி மாவட்டத்தில் உள்ள பிரபல மார்க்கெட்களான பெங்காலி மார்க்கெட், கான் மார்க்கெட் ஆகியவையும் மூடப்படும்.
இந்த நடவடிக்கையால் தங்களது வயிற்றுப்பிழைப்பில் மண் விழுந்து விடும் என்று வியாபாரிகள் புலம்புகின்றனர். இதில் சிறு வியாபாரிகள், பிளாட்பார வியாபாரிகள்தான் மிகவும் பாதிக்கப்படுவார்கள். தொழிலுக்கு வாங்கிய கடனுக்காக அன்றாடத் தவணையைக் கட்டமுடியாமல் போகும் என்று தவிக்கின்றனர்.
இது பற்றி புதுடெல்லி வியாபாரிகள் சங்கத் தலைவர் அதுல் பார்கவா கூறுகையில், உச்சி மாநாட்டை முன்னிட்டு செப்டம்பர் 8 முதல் 10 வரை கன்னாட் பிளேஸ் மார்க்கெட் இயங்காது. இந்த மூன்று நாட்களும் வார இறுதியை ஒட்டி வருவதால் வியாபாரிகளுக்கு மிகப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி விடும்.
கன்னாட் பிளேஸ் மார்க்கெட்டில் தினசரி ரூ.100 முதல் ரூ.150 கோடி வரை வியாபாரம் நடைபெறும். ஆனால் அடுத்த
மூன்று நாட்களுக்கு மொத்தம் ரூ.450 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். அரசின் இந்த முடிவு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது நல்லதல்ல. ஆனால் பாதுகாப்பு காரணங்களை காட்டி மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறுவது சரியல்ல என்றார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications