அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைநகர் டெல்லிக்கு இருநாடுகள் மத்தியிலான இருதரப்பு சந்திப்பு மற்றும் ஜி-20 உச்சி மாநாட்டிற்காக வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, இரு நாடுகள் மத்தியிலான நட்புறவை மேம்படுத்தும் வகையில் பாதாம் மற்றும் மசூர் பருப்பு போன்ற சில அமெரிக்கப் பொருட்களின் இறக்குமதிக்கு பதிலடி கொடுக்கப்பதற்காக விதிக்கப்பட்ட சுங்க வரிகளை செப்டம்பர் 6, 2023 முதல் ரத்து செய்தது மத்திய அரசு.
இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்படும் சில ஸ்டீல் மற்றும் அலுமினியப் பொருட்களுக்கான சுங்க வரியை அமெரிக்கா உயர்த்தியதை அடுத்து, ஜூன் 2019 இல், 28 அமெரிக்கப் பொருட்களின் இறக்குமதி வரியை இந்தியா உயர்த்தியது.

செப்டம்பர் 5 அன்று வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில், மத்திய நிதி அமைச்சகம் இந்த வரி உயர்வுகளில் சிலவற்றை பொது நலன் கருதி கைவிடுவது அவசியம் என்று கணக்கிட்டு குறைத்துள்ளோம் என தெரிவித்துள்ளது.
ஜூன் 2023 இல் அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி அரசு பயணம் மேற்கொண்ட போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பைடன் நிர்வாகம் உலக வர்த்தக அமைப்பில் (WTO) நிலுவையில் உள்ள ஆறு இருதரப்பு வர்த்தக பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், விதிக்கப்பட்ட வரி உயர்வைத் திரும்பப் பெறுவதற்கும் ஒப்புக்கொண்டனர்.
அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியா விதித்த வரி விதிப்பில் அக்ரூட் பருப்புகள், பாதாம் மற்றும் ஆப்பிள்கள் உட்பட சில அமெரிக்க தயாரிப்புகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜி20 உச்சிமாநாட்டிற்கு ஜோ பைடன் வருகையையொட்டி தற்போது வரி விதிப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கலிபோர்னியாவின் பாதாம் போர்டு (ABC) வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் வரி குறைப்பு நடவடிக்கையை வரவேற்றுள்ளது, இந்தியாவிற்கு அவர்கள் அனுப்பும் பாதாம் ஏற்றுமதி மீதான இறக்குமதி வரிகள் இப்போது சிப்பியுடன் இருக்கும் பாதாம் பருப்பு ஒரு கிலோவுக்கு ₹35 ஆகவும், வெறும் பாதாம் பருப்பு கிலோவுக்கு ₹100 ஆகவும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்பு இந்திய அரசு விதித்த வரி காரணமாக சிப்பியுடன் இருக்கும் பாதாம் பருப்பு ஒரு கிலோவுக்கு ₹41 ஆகவும், வெறும் பாதாம் பருப்பு கிலோவுக்கு ₹120 ஆகவும் இந்தியா உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

மோடி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்..? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும் சவால்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்



Click it and Unblock the Notifications