உலகத் தலைவர்களின் சக்தி வாய்ந்த ஜி20 குழுவை இந்தியா நடத்துவது இதுவே முதல் முறை என்பதாலும், இக்கூட்டத்தின் மூலம் இந்தியாவின் பிம்பத்தை உலக நாடுகள் முன்னிலையில் மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் அனைத்து வகையிலும் சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
டெல்லியில் போக்குவரத்து ரவுண்டானா அலங்கார மலர்கள் மற்றும் நீரூற்றுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் பொது கட்டடங்கள் மற்றும் நடைபாதைகளுக்கு புதிய கலர்கோட்டிங் செய்யப்பட்டு ஜொலிக்கின்றன.

இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் இரண்டு நாள் G20 உச்சி மாநாட்டில் உலகின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளாக ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள், குரங்குகளை விரட்ட லாங்கர்களின் கட்அவுட்டுகள் மற்றும் 130,000 போலீஸ் மற்றும் துணை ராணுவப் பணியாளர்கள் மூலம் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
ஜி20 என்றால் என்ன..?
1999 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆசிய நிதி நெருக்கடிக்குப் பிறகு உலகின் 20 முக்கிய நாடுகள் ஒன்றிணைந்து இந்த சிறப்பு பொருளாதாரக் குழுவை உருவாக்கியது. அத்தகைய நெருக்கடிகளை இனி ஒரு நாட்டின் எல்லைக்குள் கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்ந்து சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு தேவை என்ற புரிதலுடன் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
ஜி20 குழுவில் இருக்கும் 20 நாடுகள் உலகின் 85 சதவீத ஜிடிபி மற்றும் 75 சதவீத சர்வதேச வர்த்தகத்தை கொண்டு உள்ளது. இக்குழுவில் உறுப்பு நாடுகளாக அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் உள்ளன.
ஜி20 குழு துவங்கிய ஆரம்பக்கட்டத்தில் நிதித்துறை அமைச்சர்கள் மட்டுமே பங்கேற்றனர். பின்னர் அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவர்களும் 2008 நிதி நெருக்கடிக்குப் பிறகு தலைவர்களின் உச்சிமாநாட்டுக்காக ஆண்டுக்கு ஒருமுறை சந்திக்க முடிவு செய்தனர்.
இந்தியாவில் ஜி20 கூட்டத்தில் எதைபற்றி விவாதிக்கப்படுகிறது..?
இந்தியாவின் ஓராண்டு கால தலைமையின் கீழ், பலதரப்பு நாடுதள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து வளரும் நாடுகளுக்கு அதிக கடன்கள், சர்வதேச கடன் கட்டமைப்பை சீர்திருத்துதல், கிரிப்டோகரன்சி மீதான விதிமுறைகள் மற்றும் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பில் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையின் தாக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டது.
இந்த ஆண்டு இதுவரை, உக்ரைனில் நடந்த போர் பற்றி பல்வேறு கருத்துகள் இருந்ததால் இதுவரை ஜி20 கூட்டமைப்பு எந்த கூட்டு அறிக்கையையும் வெளியிடவில்லை.
உக்ரைனில் நடந்த போருக்கு ரஷ்யா-வை குற்றம் சாட்டுவதற்கு ரஷ்யாவும் சீனாவும் எதிர்ப்பு தெரிவிக்கும் அதே வேளையில், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கூட்டறிக்கைக்கு கடும் கண்டனத்தை கோரியுள்ளன.
இந்தியாவின் G20 தீம் சமஸ்கிருத சொற்றொடரான "வசுதைவ குடும்பகம்" என்பதிலிருந்து உருவாக்கப்பட்டது. இதற்கு "உலகம் ஒரு குடும்பம்" என்று அர்த்தம். டிசம்பர் 1-ம் தேதி பிரேசில் நாட்டிடம் ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா ஒப்படைக்கும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications