இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் அதைச் சார்ந்த வர்த்தகத்தின் மூலம் தனது வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ள முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சுமார் 75000 கோடி ரூபாய் முதலீட்டில் கிரீன் எனர்ஜி வர்த்தகத்தில் 4 நிறுவனங்களை உருவாக்குவதற்கான பணிகள் செய்து வருகிறது.
இதில் மிக முக்கியமாகப் பார்க்கப்படுவது ஹைட்ரஜட் வாயு உற்பத்தி தொழிற்சாலை மற்றும் ஹைட்ரஜட் வாயு மூலம் இயக்கும் பியூயல் செல் தொழிற்சாலை தான். இவ்விரண்டும் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையை மொத்தமாக மாற்ற முடியும்.
இந்தச் சூழ்நிலையில் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்குப் போட்டியாக மத்திய அரசுக்குச் சொந்தமாக GAIL நிறுவனம் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஹைட்ரஜட் வாயு உற்பத்தி தொழிற்சாலை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
முகேஷ் அம்பானி ஆதிக்கம்
கிரீன் எனர்ஜி துறையில் அதிகளவிலான போட்டி இல்லாத காரணத்தால் முகேஷ் அம்பானி குறைந்த காலகட்டத்திலேயே மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவார் எனக் கணிக்கப்பட்ட நிலையில் முகேஷ் அம்பானியின் மிகப்பெரிய திட்டத்தில் ஒன்றான ஹைட்ரஜட் வாயு உற்பத்தித் துறையில் அரசு நிறுவனமான கெயில் இறங்கியுள்ளது.
ஹைட்ரஜட் வாயு உற்பத்தி
இந்தியாவில் ஹைட்ரஜட் வாயு உற்பத்தி தொழிற்சாலை அமைப்பது குறித்துக் கெயில் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது, கெயில் நிறுவனம் இந்தியாவிலேயே மிகப்பெரிய கிரீன் ஹைட்ரஜட் வாயு உற்பத்தி தொழிற்சாலை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
14 மாதம்
இந்தப் பிரம்மாண்ட தொழிற்சாலை அடுத்த 12 முதல் 14 மாதத்தில் கட்டிமுடிக்கப்பட்டு, கெயில் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு வர்த்தகத்திற்கு இணையான வர்த்தகத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது. கிரீன் ஹைட்ரஜட் வாயு என்பதால் இயற்கை எரிவாயு போல் இதில் கார்பன் இருக்காது.
4.5 டன் கிரீன் ஹைட்ரஜட் வாயு
இதுகுறித்து கெயில் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான மனோஜ் ஜெயின் கூறுகையில் தினமும் 4.5 டன் கிரீன் ஹைட்ரஜட் வாயு உற்பத்தி செய்யும் அளவிற்கான 10 மெகாவாட் எலக்ரோலைசர்-ஐ அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எலக்ரோலைசர்
கிரீன் ஹைட்ரஜட் வாயுவை உற்பத்தி செய்யும் எலக்ரோலைசர்-ஐ வாங்குவதற்காகக் கெயில் ஏற்கனவே உலகளவில் டென்டர் விட்டு உள்ளது. இந்நிலையில் அடுத்த 12 முதல் 14 மாதத்தில் எலக்ரோலைசர் வாங்கப்பட்டு உற்பத்தியை கெயில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்தியப் பிரதேசம்
மேலும் இந்தக் கிரீன் ஹைட்ரஜட் வாயுவை உற்பத்தி செய்யும் எலக்ரோலைசர்-ஐ அமைக்கக் கெயில் நிறுவனம் 2 முதல் 3 இடத்தைத் தேர்வு செய்துள்ளது. அதில் ஒன்று மத்தியப் பிரதேசத்தில் இறுக்கும் விஜைபூர்.
NTPC, இந்தியன் ஆயில்
கெயில் நிறுவனத்தைப் போலவே கிரீன் ஹைட்ரஜட் வாயுவை உற்பத்தி செய்ய NTPC, இந்தியன் ஆயில் கார்ப் ஆகிய நிறுவனங்களும் முடிவு செய்து அதற்கான பணிகளையும் செய்யத் துவங்கியுள்ளது. இதனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பலமுனை போட்டியை எதிர்கொள்ள உள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications