இந்தியாவின் தொழில்நுட்பத் துறையில் புதிய திருப்பமாக, சில மாதங்களுக்கு முன்பு ஐடி மற்றும் தொழில்நுட்ப சேவைகள் மட்டுமின்றி, உற்பத்தி துறையிலும் தனது கால்தடம் பதித்துள்ள கூகுள். தற்போது தமிழ்நாட்டில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட்போன்கள் மற்றும் ட்ரோன்கள் தயாரிப்பில் இறங்கியுள்ளது கூகுள்.
இதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டில் இருக்கும் பிற ட்ரோன் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் முக்கியமான திட்டங்களைக் கையில் எடுத்துள்ளது.

இதில் முக்கியமாக இந்தியாவின் முன்னணி ட்ரோன் நிறுவனங்களில் ஒன்றான கருடா ஏரோஸ்பேஸ், அண்மையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் நடத்திய சந்திப்பில், இந்தியாவில் பாதுகாப்புத் துறைக்கான ட்ரோன்களை உருவாக்குவதில் கருடா ஏரோஸ்பேஸ்-ன் பங்களிப்பும், திட்டம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு உள்ளது.
இந்திய அளவில் தற்போது விவசாயம் மற்றும் நுகர்வோர் ட்ரோன் பிரிவின் கிங் மேக்கராக இருக்கும் கருடா ஏரோஸ்பேஸ், அடுத்த இரண்டு ஆண்டுகளில் பாதுகாப்புத் துறையில் பயன்படுத்தும் ட்ரோன்களை தயாரிப்பதிலும், டிசைன் செய்வதிலும் முக்கிய இடத்தை பிடித்து ஆதிக்கம் செலுத்தத் திட்டமிட்டு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இந்த நிலையில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான ஜெயபிரகாஷ், சென்னையில் பாதுகாப்புத் துறையில் பயன்படுத்தும் ட்ரோன் விமானங்களை கட்டமைக்க ஒரு புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான திட்டம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் விவாதித்தார்.
சென்னையில் அமைக்கப்படும் இந்த புதிய தொழிற்சாலை 30,000 சதுர அடி பரப்பளவில் அதிநவீன ட்ரோன் டிசைன், உற்பத்தி மற்றும் சோதனை வசதிகளை கொண்டிருக்கும். இந்த வசதி, ட்ரோன் துணை அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் ட்ரோன் மோட்டார்கள், பேட்டரிகள் மற்றும் ட்ரான்ஸ்மிட்டர்கள் போன்ற முக்கிய உதிரிபாகங்களுக்கான உள்ளூர் உற்பத்தி தளத்தையும் இதில் கொண்டிருக்கும்.
இதுகுறித்து ஜெயபிரகாஷ் கூறுகையில் இந்தியாவை 2030 ஆம் ஆண்டிற்குள் ட்ரோன் ஹப் ஆக மாற்றும் இலக்கை பற்றி விவாதிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுடன் சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன்.
உலக நாடுகளுக்கு இந்தியாவின் ட்ரோன் தயாரிப்புகளைக் கருடா ஏரோஸ்பேஸ் உருவாக்கி ஏற்றுமதி செய்யவும். இதில் பாதுகாப்புத் துறைக்கான பயன்பாடுகள் திட்டத்தை அமைச்சர் மிகவும் பாராட்டினார் என தெரிவித்தார்.
இந்திய பாதுக்காப்பு துறைக்கான அனைத்து விதமான ஆயுதங்களையும், தடவாளங்களையும் உள்நாட்டிலேயே தயாரிப்பது மூலம் அரசின் இறக்குமதி செலவுகள் குறைக்கப்பட்டு, அரசின் நிதி பற்றாக்குறை இலக்கையும், வேலைவாய்ப்பு இலக்கையும் இதன் மூலம் அடைய திட்டமிட்டு உள்ளது. இதனால் பாதுகாப்புத் துறை சார்ந்த அனைத்து உற்பத்தி திட்டங்களையும் மத்திய அரசு கூர்ந்து கவனித்து ஒப்புதல் அளித்து வருகிறது.
More From GoodReturns

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?



Click it and Unblock the Notifications