சந்தை மதிப்பீட்டின் படி இந்தியாவின் இரண்டாவது பெரிய சிமென்ட் உற்பத்தி நிறுவனமாக இருக்கும் அம்புஜா சிமென்ட்ஸ், தமிழ் குட்ரிட்டன்ஸ் நேற்று வெளியிட்டதை போல் குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரபல சிமென்ட் உற்பத்தி நிறுவனமான சங்கி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளை வாங்கியுள்ளார்.
இன்று அதாவது ஆகஸ்ட் 3 ஆம் தேதி, அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அதானி குரூப் மற்றும் சங்கி இண்டஸ்ட்ரீஸ் பங்கு விற்பனை குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது மட்டும் அல்லாமல், பங்கு விற்பனைக்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு உள்ளனர்.

அதானி குழுமத்திற்கு சொந்தமான அம்புஜா சிமென்ட்ஸ், சங்கி இண்டஸ்ட்ரீஸ்-ன் ப்ரோமோட்டர்களான ரவி சங்கி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருந்து 56.74 சதவீத சங்கி இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
சங்கி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு பங்கிற்கு 114.22 ரூபாய் என்ற விலையில் வாங்கு உள்ளது அம்புஜா சிமென்ட்ஸ். இந்த முக்கியான வர்த்தகத்தின் மூலம் சங்கி இண்டஸ்ட்ரீஸ் சுமார் 5000 கோடி ரூபாயில் மதிப்பிடப்பட்டு உள்ளது. அதானி குழுமம் இந்த தொகையை தனது உள்நிர்வாக நிதி திரட்டல் மூலம் செலுத்த உள்ளது.
கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் சுமார் 2,837 கோடி ரூபாய்க்கு சங்கி இண்டஸ்ட்ரீஸ்-ன் 56.74 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார். இந்த முக்கிய கையகப்பற்றல் மூலம் அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் வேகமான வளர்ச்சி பயணத்தில் முக்கிய மைல்கல் என கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டில் அதானி குழுமம் அம்புஜா சிமென்ட்ஸ் மற்றும் ஏசிசி சிமென்ட் நிறுவனங்களை வாங்கிய பின், சிமென்ட் துறையில் அதானி குழுமத்தின் மூன்றாவது கையகப்பற்றலாகும். அதானி குழுமம் இன்பரா துறையில் மிகப்பெரிய திட்டங்களை கையில் இருக்கும் வேளையில், இந்தியா மொத்தமும் இன்பரா துறை வளர்ச்சிக்கு முக்கியதுவம் அளிக்கும் வேளையில் அதானி திட்டமிட்டு சிமெண்ட் துறையில் அதிகப்படியான பணத்தை முதலீடு செய்து வருகிறார்.
அம்புஜா சிமென்ட்ஸ், சங்கி இண்டஸ்ட்ரீஸை கையகப்படுத்துவதன் மூலம் அதன் மொத்த சிமென்ட் உற்பத்தித் திறன் வருடாந்திர அடிப்படையில் 9 சதவீதம் அதிகரிக்கும். இதன் மூலம் அதானி குழுமத்தின் மொத்த சிமெண்ட் உற்பத்தி 73.6 மில்லியன் டன்னாக உயர்த்த முடியும் என்று எதிர்பார்க்கிறது.

இதோடு அதானி குழுமம் பெரிய சரக்கு கப்பல்களை கையாள குஜராத் சங்கிபுரத்தில் உள்ள துறைமுகத்தை விரிவுபடுத்தும் திட்டத்தையும் அறிவித்துள்ளதால், இந்த ஒப்பந்தம் மூலம் அம்புஜா சிமெண்ட் நிறுவனத்திற்கு சங்கி இண்டஸ்ட்ரீஸ்-ன் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டன் சுண்ணாம்புக் கல் இருப்பை பயன்படுத்த முடியும்.
அதானி குழுமம் சங்கி இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்கியதன் மூலம் குறைவான விலையில் சிமெண்ட் தயாரித்து குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு சப்ளை செய்ய முடியும் என கரண் அதானி தெரிவித்துள்ளார். அதானி குழுமத்தின் தடலாடி வளர்ச்சி சிமெண்ட் துறையில் ஆதிக்கம் செலுத்தும் ஆதித்யா பிர்லா குழுமத்திற்கு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications