பொதுவாக ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு நாம் என்னெவெல்லாம் கவனிப்போம், அந்த நிறுவனத்தின் நிதி நிலவரம், முதல் அதன் PE விகிதம் என பலவற்றை கவனிப்போம்.
இதில் முக்கிமாக அந்த நிறுவனம் எவ்வளவு வருவாயை ஈட்டுகிறது? அந்த நிறுவனம் எவ்வளவு செலவு செய்கிறது? நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட் எப்படி உள்ளது? ஆகியவற்றை ஆராயாமல் ஒரு புதிய நிறுவனத்தில் முதலீடு செய்ய மாட்டோம்.

ஆனால் இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களும், பணக்காரர்களுமான அதானி மற்றும் அம்பானி திவாலான நிறுவனங்களைத் தேடித் தேடிச் சென்று வாங்குகின்றனர். இதன் பின்னணி என்ன? விரிவாக பார்க்கலாம்.
திவாலான நிறுவனங்களை வாங்க போட்டி: கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகிய இருவருமே சத்தீஸ்கரில் உள்ள பவர் நிறுவனமான லேன்கோ அமர்கண்டாக்-ஐ (Lanco Amarkantak) வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர். திவாலான இந்த நிறுவனத்தை வாங்க அதானி மற்றும் அம்பானி போட்டி போட்டுக் கொண்டு ரூ.4,100 கோடியை கொடுக்க முன் வந்துள்ளனர்.
இது மட்டும் அல்லாமல் கடந்த மாதம் அதானி பவர் நிறுவன வாரியம் கோஸ்டல் எனர்ஜென்ஸ் என்ற திவாலான நிறுவனத்தை ரூ.3,500 கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்புதல் அளித்தது.
கடந்த ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனம் திவாலான பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தை 24 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தி வாங்குவதற்கு தயாராக இருந்தது இந்த இடத்தில் நினைவு கூற வேண்டும். ஏற்கனவே அதானி, அனில் அம்பானியின் திவாலான நிலக்கரி நிலையங்களை வாங்குவதிலும் ஆர்வம் காட்டுகிறார்.
திவாலான நிறுவனங்களை வாங்குவதற்கான ரகசியம்:
பெரும் முதலாளிகள், பெரும் தொழிலதிபர்கள், பெரும் பணக்காரர்கள் ஏன் திவாலான நிறுவனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்ற கேள்வி இங்கே எழுகிறது.
திவாலான நிறுவனங்கள் பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் கிடைக்கின்றன நிறுவனங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் எப்படியாவது தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப பெற்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் கிடைத்த விலைக்கு விற்பதற்கு தயாராக இருக்கின்றன.
ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனத்தை வாங்கி முதலீடு செய்து லாபம் காண்பது எளிது தொடக்கத்தில் இருந்து ஒரு விஷயத்தை தொடங்க வேண்டிய அவசியம் கிடையாது.
குறிப்பாக இது நாள் வரை அவர்கள் தொடாத ஒரு துறையில் எளிதாக கால் பதிப்பதற்கு இத்தகைய திவாலாகும் நிறுவனங்கள் உதவுகின்றன
எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும் என்ற கணிப்பில், குறைந்த விலைக்கு வாங்கி அதன் மூலம் அதிக லாபம் ஈட்டுவது தான் இவர்களின் ராஜதந்திரம். இந்த யுக்தி தான் பல்வேறு துறைகளில் இவர்கள் கால்பதிக்க உதவுகிறது மற்றும் பெருமளவில் சொத்து சேர்க்கவும் வழிவகுக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

கேரள சம்மர் பம்பர் லாட்டரி BR-108 முடிவுகள் ரூ.10 கோடி ஜாக்பாட் யாருக்கு?

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications