புடிச்சாலும் புளியங்கொம்பு.. புதிய துறைமுகத்தைக் கைப்பற்றினார் கௌதம் அதானி

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான அதானி குழுமம், ஹிண்டர்பெர்க் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் வழக்கின் தீர்ப்புகள் சாதகமாக அமைந்த அதே நேரத்தில் கௌதம் அதானி பல கடன்களை குறைத்த வேளையில் மீண்டும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் வேகமெடுத்துள்ளது அதானி குழுமம்.

இந்த நிலையில் இந்தியாவில் துறைமுக வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அதான் போர்ட்ஸ் நிறுவனம் கிழக்கு கடற்கரையில் தனது செல்வாக்கை வலுப்படுத்தும் நோக்கில், ஒடிசாவின் கோபால்பூர் துறைமுகத்தில் 95 சதவீத பங்குகளை அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் (APSEZ) நிறுவனம் சுமார் 1,349 கோடி ரூபாய்க்குக் கையகப்படுத்தியுள்ளது.

புடிச்சாலும் புளியங்கொம்பு..  புதிய துறைமுகத்தைக் கைப்பற்றினார் கௌதம் அதானி

இந்த ஒப்பந்தத்தின் மூலம், ரியல் எஸ்டேட் துறையில் முன்னணியில் இருக்கும் ஷபூர்ஜி பல்லோஞ்சி குழுமத்தின் (SP Group) கட்டுப்பாட்டில் இருந்த 56 சதவீத கோபால்பூர் துறைமுக பங்குகளையும், ஒரிசா ஸ்டீவிடோர்ஸ் நிறுவனத்திடம் இருந்த 39 சதவீத கோபால்பூர் துறைமுக பங்குகளையும் அதானி போர்ட்ஸ் நிறுவனம் வாங்குகிறது.

அதானி போர்ட்ஸ் மற்றும் ஷபூர்ஜி பல்லோஞ்சி குழுமம் - ஒரிசா ஸ்டீவிடோர்ஸ் மத்தியில் நடந்த இந்த ஒப்பந்தத்தில் கோபால்பூர் துறைமுகம் சுமார் 3080 கோடி ரூபாய் மதிப்பில் கணக்கில் பங்குகள் கைமாற உள்ளது. கோபால்பூர் துறைமுகம் இரும்பு தாது, நிலக்கரி, சுண்ணாம்பு, இல்மனைட் மற்றும் அலுமினா போன்ற பல்வேறு வகையான உலர் சரக்குகளைக் கையாள்கிறது.

2023 நிதியாண்டில், கோபால்பூர் துறைமுகம் 7.4 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) சரக்குகளை கையாண்டது, இத்துறைமுகத்தின் மொத்தக் கொள்ளளவு 20 MMT ஆகும். நடப்பு நிதிய ஆண்டில், 11.3 MMT சரக்குகளை கையாளும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் கோபால்பூர் துறைமுகம் இந்த ஆண்டு 520 கோடி ரூபாய் மதிப்பிலான ஆப்ரேட்டிங் வருவாயை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அதானி போர்ட்ஸ் தெரிவித்துள்ளது.

கிழக்கு கடற்கரை மற்றும் மேற்கு கடற்கரை இடையே சரக்கு போக்குவரத்தில் புதிய மாற்றத்தையும் வளர்ச்சியை கொண்டு வருவது தான் எங்களுடைய இலக்கு, இந்த இலக்கை எட்டும் வகையில் இந்த முக்கிய முதலீடு செய்யப்பட உள்ளதாக அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ தெரிவித்துள்ளது. கோபால்பூர் துறைமுகத்தின் இருப்பிடம் ஒடிசா என்றால் இதன் அருகில் உள்ள சுரங்க மையங்களை அடைய எளிதாக்கும் என்பதையும் அதானி துறைமுகங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.

அதானி துறைமுகங்கள் மற்றும் SEZ (APSEZ) நிறுவனம், இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைகளில் சுமார் 12 துறைமுகங்கள் மற்றும் முனையங்களை நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் தூத்துக்குடி voc துறைமுகத்தின் 4 மில்லியன் டன் கண்டெய்னர் முனையம் திட்டத்திற்கு அதானி போர்ட்ஸ் உட்பட 3 இந்திய நிறுவனங்களும், ஒரு சிங்கப்பூர் நிறுவனமும் விண்ணப்பம் கொடுத்துள்ளது.

மேலும் இந்தியாவில் தற்போது முக்கியமான முதலீடுகள் அனைத்தும் கிழக்கு இந்திய பக்கம் செல்வதால் அதானி குழுமத்தின் முதலீடுகள் பெரும் மாற்றத்தையும், வாய்ப்புகளைத் தரும். சமீபத்தில் டாடா குரூப், JSW குரூப் ஆகியவை அடுத்தடுத்து ஒடிஷா, அசாம் ஆகிய மாநிலத்தில் முதலீடுகளைச் செய்தது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+