கௌதம் அதானிக்கு நிம்மதி!! டிரம்ப் நிர்வாகம் எடுத்த ஒரே முடிவால் மாறிய வாழ்க்கை!!

இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவராகவும் நம்பர் ஒன் தொழிலதிபராகவும் இருக்கும் கெளதம் அதானிக்கு எதிராக அமெரிக்க அரசு தொடர்ந்த மோசடி வழக்கு கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு தொடர்ந்த மோசடி வழக்கை டொனால்ட் டிரம்ப் அரசு கைவிட முடிவெடுத்துள்ளது.

தனக்கு எதிரான வழக்கை கைவிட்டால் அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்படும் என்று கெளதம் அதானி தரப்பில் தெரிவிகப்பட்டதாக நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு தொழிலதிபா் கெளதம் அதானி 265 மில்லியன் டாலா் அதாவது 2,450 கோடி ரூபாய் லஞ்சம் அளித்ததாக, கடந்த 2024-ஆம் ஆண்டு அமெரிக்க நீதித் துறை குற்றஞ்சாட்டியது. இதுதொடா்பாக அமெரிக்காவில் உள்ள நியூயாா்க் நீதிமன்றத்தில் நீதித் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், விசாரணை நடைபெற்று வருகின்றது.

 கௌதம் அதானிக்கு நிம்மதி!! டிரம்ப் நிர்வாகம் எடுத்த ஒரே முடிவால் மாறிய வாழ்க்கை!!

அமெரிக்காவில் தொடரப்பட்ட இந்த வழக்கு கௌதம் அதானிக்கு பெரிய பிரச்சினையை ஏற்படுத்துயது. பங்குகளும் சரிவடை கண்டன. இதனிடையே, அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் (எஸ்இசி) தொடுத்துள்ள மோசடி வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அதானி தரப்பில் கடந்த மாதம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை நடத்துவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தனிப்பட்ட வழக்கறிஞர்களில் ஒருவரும், புகழ்பெற்ற 'சல்லிவன் & கிராம்வெல்' சட்ட நிறுவனத்தின் இணைத் தலைவருமான ராபர்ட் ஜே. ஜியுஃப்ரா ஜூனியர் தலைமையில் புதிய சட்டக் குழுவை சமீபத்தில் அதானி நியமித்திருந்தார். இந்த வழக்கை கைவிடுவது தொடர்பாக வாஷிங்டனில் உள்ள அமெரிக்க நீதித்துறையின் தலைமையகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் கலந்துகொண்ட ஜியுஃப்ரா, வழக்கை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆதாரங்கள் அரசுத் தரப்பிடம் இல்லை எனக் கூறி சில சான்றுகளை சமர்ப்பித்து வாதிட்டதாக கூறப்படுகிறது.

Also Read

மேலும், அதானி மீதான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு கைவிட்டால், அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யவும், 15,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அதானி தயாராக இருப்பதாகவும் முறையிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

இந்த நிலையில், கெளதம் அதானிக்கு எதிரான மோசடி வழக்கை கைவிட அமெரிக்க நீதித்துறையின் மூத்த அதிகாரிகள் சிலர் ஒப்புக் கொண்டதாகவும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூரிய மின்சக்தியை விநியோகிப்பதற்கான திட்டங்களுக்கு அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை அதானி குழுமம் திரட்டியது. அந்த வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களை மோசடிக்குள்ளாகி, அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டது மறைக்கப்பட்டது என்று குற்றஞ்சாட்டப்பட்டது.இதுதொடா்பாக நியூயாா்க் மாவட்ட நீதிமன்றத்தில் எஸ்இசி வழக்கு தொடுத்தது. எனினும் தம் மீதான குற்றச்சாட்டுகளை கெளதம் அதானியும் சாகா் அதானியும் மறுத்திருந்தனா்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+