மும்பை: இந்தியாவில் அதானி குழுமம் எரிசக்தி ,துறைமுகங்கள் மேலாண்மை , விமான நிலையங்கள் மேலாண்மை , சிமெண்ட் என பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாகி இயங்கி வருகிறது. அதானி குழுமம் அடுத்த கட்டமாக ரியல் எஸ்டேட் துறையில் கால் பதிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது .
கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் தற்போது திவால் நிலையில் இருக்கக்கூடிய ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களை கையகப்படுத்தி இருக்கிறது. Housing Development and Infrastructure (HDIL) நிறுவனம் மும்பையின் புகழ்பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனமாக இயங்கி வந்தது.

மும்பையின் பல்வேறு பகுதிகளில் இடங்களை வாங்கி வீடு கட்டி விற்பனை செய்து வந்த இந்த நிறுவனம் நஷ்டத்துக்கு சென்றது.இதனை அடுத்து 2019ஆம் ஆண்டு இந்த நிறுவனம் மீது திவால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்நிறுவனம் மேற்கொண்டு வந்த ரியல் எஸ்டேட் திட்டங்கள் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு எந்த நிறுவனங்கள் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஹெச்டிஐஎல் நிறுவனத்துக்கு சொந்தமான மும்பையின் பிரதான பகுதியில் இருந்த இரண்டு முக்கியமான சொத்துக்களை அதானி நிறுவனம் வாங்க இருக்கிறது. தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயமும் அதானி குழுமத்தின் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது . இன்ஸ்பயர் பிகேசி என்ற பெயரில் ஹெச்டிஐஎல் நிறுவனம் வைத்திருந்த வணிக ரீதியான சொத்தும், கல்யாண சகாத் பகுதியில் அமைந்திருக்கும் பல்வேறு நிலங்களும் இந்த நடைமுறையின் மூலம் அதானி வசம் செல்ல இருக்கிறது.

பிகேசி பகுதியில் அமைந்திருக்கக்கூடிய வணிக ரீதியிலான கட்டிடங்களுக்கு 3 கோடி ரூபாயையும் கல்யாண் சகாத் பகுதியில் அமைந்திருக்கும் நிலங்களுக்கு சுமார் 152 கோடி ரூபாயையும் அதானி குழுமம் செலுத்த இருக்கிறது. தற்போதைக்கு இந்த இரண்டு சொத்துக்களின் மதிப்பும் சுமார் 2000 கோடி வரை இருக்கும் என்று ரியல் எஸ்டேட் துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை ரியல் எஸ்டேட் சந்தை அதிக மதிப்பு கொண்டதாகவும் வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு சந்தையாகவும் இருக்கும் நிலையில் இங்கே இரண்டு முக்கியமான பகுதிகளில் இருக்கும் சொத்து அதானி வசம் சென்றுள்ளது. இதன் மூலம் மும்பையில் அதிகமான சொத்து வைத்திருக்கும் ஒரு நபராக அதானி மாறுகிறார். அதானி குழுமம் ரியல் எஸ்டேட் சந்தையில் வேகமாக இயங்க இருப்பதையே இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.
ஏற்கனவே அதானி நிறுவனம் தாராவி மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இதனை மறுசீரமைப்பு திட்டத்தை மகாராஷ்ட்ரா மாநில அரசு கொண்டு வந்தது. அதற்கான டெண்டரை அதானி குழுமம் தான் கைபற்றியது.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications