இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் வணிக குழுமங்களில் ஒன்றான அதானி குழுமம், அசுர வளர்ச்சியினை கண்டு வருகின்றன. சர்வதேச அளவில் போட்டி போடும் அதானி குழுமம், கப்பல் முதல் எனர்ஜி வரையில் பற்பல வணிகங்களிலும் வெற்றிகரமாக கோலேச்சியுள்ளது.
கெளதம் அதானி இந்தியாவில் ஒருபோதும் முதலீடுகளை குறைத்ததில்லை. நிறுத்தவும் இல்லை. ஏனெனில் நிறுவனத்தின் வெற்றியானது அதன் வளர்ச்சி கட்டமைப்பினை அடிப்படையாக கொண்டது என அதன் வருடாந்திர கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதியாளர்
இது குறித்து அதானி குழுமத்தின் வருடாந்திர கூட்டத்தில் பேசிய அதானி, புதிய எரிசக்தி வணிகத்தில் முன்னர் அறிவிக்கப்பட்ட 70 பில்லியன் டாலர் முதலீடு என்பது, இந்தியாவை எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியாளரில் இருந்து, தூய்மையான எரிசக்தி ஏற்றுமதியளராக மாற்ற உதவும் என தெரிவித்துள்ளார்.
வெற்றி இந்தியாவுடன் இணைந்திருக்கும்
ஆக ஒருபோதும் நாங்கள் இந்தியாவில் இருந்து விலகியதும் இல்லை. முதலீட்டினை குறைத்ததும் இல்லை. முதலீட்டினை நிறுத்தவும் இல்லை. ஒரு போதும் நாங்கள் முதலீட்டினை குறைக்க மாட்டோம். எங்களின் அளவு பன்முகப்படுத்தப்பட்ட வணிகம், எங்களை சிறப்பாக செயல்பட நிலை நிறுத்துக்கின்றன என்று நாங்கள் நம்புகிறோம். அதானி குழுமத்தின் வெற்றி, இந்தியாவின் வளர்ச்சியுடன் இணைந்திருப்பதை அடிப்படையாக கொண்டது என கூறியுள்ளார்.
பலதரப்பட்ட வணிகம்
1988ம் ஆண்டில் சரக்கு வணிகமாக தொடங்கப்பட்ட அதானி குழுமம், பல ஆண்டுகளாக துறைமுகங்காள், நிலக்கரி, எரிசக்தி, சப்ளை சங்கிலி, விமான நிலையங்கள், தரவு மையங்கள், சிமெண்ட், காப்பர் என பலதரப்பட்ட வணிகத்தினை மேற்கோண்டு வருகின்றது. தற்போது தனியார் நெட்வொர்க்கினை அமைக்க 5ஜி யினை ஏலம் எடுத்துள்ளது.
அதானியின் இலக்கு
அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் இந்தியாவின் மிகப்பெரிய சோலார் பவர் டெவலப்பராகும், இது 2030ல் 45 ஜிகாவாட் மின் உற்பத்தியினை இலக்காக கொண்டுள்ளது. 2022 - 23ம் ஆண்டுகுள் ஆண்டுக்கு 2 ஜிகாவாட் சோலார் மின் உற்பத்தியினை உருவாக்க 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யும் என அறிவித்துள்ளார்.
எதிர்காலத்தின் தேவை அறிந்து அதற்கேற்ப அதானி குழுமம் முதலீட்டு திட்டங்களை அறிவித்து வருகின்றது.
More From GoodReturns

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!



Click it and Unblock the Notifications