இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் சிமெண்ட் உற்பத்தி துறை மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. இதற்கு ஏற்றார் போல் சிமெண்ட் துறையில் அதானி குழுமம் இறங்கியது முதல் பெரும் போட்டிகள் நிலவி வருகிறது, இந்த போட்டியை சமாளிக்க முடியாமல் பல சிறு நிறுவனங்கள் தடுமாற துவங்கியுள்ளது.
இந்த நிலையில் ஓரியென்ட் சிமெண்ட் நிறுவனத்தில் இருக்கும் பங்குகளை அதன் உரிமையாளர் சிகே பிர்லா விற்பனை செய்ய கடந்த சில மாதங்களாக முயற்சி செய்து வரும் நிலையில் இருவருடைய நிறுவன மதிப்பீட்டை யாரும் ஏற்காத நிலையில் கடைசி ஆஃப்ஷனாக இருந்த கௌதம் அதானியிடம் வந்துள்ளார்.

இந்திய சிமெண்ட் துறையில் கடந்த 1.5 வருடத்தில் அதானி குழுமம் அம்புஜா சிமெண்ட், ஏசிசி சிமெண்ட், சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் இருக்கும் சங்கி சிமெண்ட் ஆகியவற்றை வாங்கியுள்ளார். இதன் மூலம் சிமெண்ட் உற்பத்தி துறையில் 2வது பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது மட்டும் அல்லாமல் உற்பத்தியை அதிகரிக்க தொடர்ந்து முதலீடு செய்யவும் திட்டமிட்டு உள்ளது அதானி குழுமம்.
இந்த நிலையில் 4வது நிறுவனமாக சிகே பிர்லா -வின் ஓரியென்ட் சிமெண்ட் நிறுவன பங்குகளை வாங்க கௌதம் அதானி பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளார். இதற்காக இரு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் கலந்து ஆலோசனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வருடத்தின் துவக்கத்தில் ஓரியென்ட் சிமெண்ட் நிறுவன பங்குகளை வாங்குவதற்கு சிறந்த நபரை தேடும் பணியில் ஜேபி மோர்கன் இணைந்தது குறிப்பிடத்தக்கது. ஓரியென்ட் சிமெண்ட் நிறுவனத்தில் பிர்லா குடும்பம் மற்றும் தனியார் முதலீட்டு அமைப்புகள் மூலம் சுமார் 37.9 சதவீத பங்குகளை சிகே பிர்லா வைத்துள்ளார்.
ஓரியென்ட் சிமெண்ட் நிறுவன பங்கு விற்பனையின் அறிவிப்பு காரணமாக கடந்த 3 மாதத்தில் இந்நிறுவன பங்குகள் சுமார் 29 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் தற்போது சிகே பிர்லா வைத்திருக்கும் மொத்த பங்குகளின் மதிப்பு 3,878 கோடி ரூபாயாகும். மேலும் இந்த பங்குகள் விற்பனை செய்யப்படட்டால் கூடுதலாக 26 சதவீத பங்குகளை புதிய ப்ரோமோட்டர் வாங்குவதற்கான வாய்ப்பு உருவாகும்.
இதன் மூலம் ஓரியென்ட் சிமெண்ட் நிறுவனத்தில் 64 சதவீத பங்குகளை வாங்கி ஆதிக்கம் செலுக்கும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை குறித்தும், பங்க விற்பனை குறித்து தனது எதுவும் தெரியாது என ஓரியென்ட் சிமெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தீபக் கேத்தரபால் ஈடி பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளார். மேலும் அதானி குழுமமும் எவ்விதமான அறிவிப்பையும் இது தொடப்பாக அறிவிக்கவில்லை.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications