இலங்கையில் மக்கள் போராட்டம் குறைந்தாலும் இன்னும் பொருளாதாரம், உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை ஆகியவை இன்னும் மோசமான நிலையில் தான் உள்ளது.
இந்நிலையில் இலங்கை அரசு ஒருபக்கம் ஐஎம்எப், உலக வங்கி ஆகியவற்றிடம் இருந்து கடன் பெற முயற்சித்து வரும் வேளையில், மறுபுறம் வெளிநாட்டு நிறுவனங்களை முதலீடு செய்ய அழைத்து வருகிறது. இந்த முதலீடுகளை ஈர்க்க அனைத்து விதமான சலுகைகளையும் அளிக்கத் தயாராகியுள்ளது இலங்கை.
இதை விட்டு வைப்பாரா அதானி..!
நிதி நெருக்கடி
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை 1948 ஆம் ஆண்டுச் சுதந்திரம் அடைந்த பின்னர் மிகவும் மோசமான நிதி நெருக்கடியுடன் போராடி வருகிறது. நிதி நிலை மற்றும் வேலைவாய்ப்பு சந்தையை மேம்படுத்த இந்த ஆண்டுக்குள் 1 பில்லியன் டாலர் அளவிலான வெளிநாட்டு நேரடி முதலீட்டை திரட்ட வேண்டும் என்பதில் இலங்கை அரசு முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
இந்த இலக்கின் முதல் கட்டமாக இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தளத்தை அமைப்பதற்கான மருபேனி கார்ப் மற்றும் இந்தியாவின் அதானி குழுமம் விருப்பம் தெரிவித்து அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என இலங்கை முதலீட்டு வாரியத்தின் (BoI) இயக்குநர் ஜெனரல் ரேணுகா வீரகோன் தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம்
மருபேனி நிறுவனம் சுமார் 800 மெகாவாட் (மெகாவாட்) சோலார் மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தி தளத்தை அமைப்பதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளது. இதேபோல் அதானி குழுமம் ஏற்கனவே 500 மெகாவாட் மின்சார உற்பத்தி திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை முடித்துள்ளது. இத்திட்டம் அடுத்த 18-24 மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீன நிறுவனங்கள்
மருபேனி கார்ப் மற்றும் அதானி குழும்ம நிறுவனங்களைப் போலவே இரண்டு சீன நிறுவனங்களும் இதேபோன்ற கிரீன் எனர்ஜி திட்டங்களில் முதலீடு செய்யவும், வர்த்தகத்தை உருவாக்கவும் முயற்சி செய்து வருகிறது. இதற்கு ஏற்றார் போல் இலங்கை அரசு தனது எனர்ஜி கொள்கையை மறு சீரமைப்புச் செய்ய ஆலோசனை செய்ய வருகிறது.
226 மில்லியன் டாலர் முதலீடு
2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 226 மில்லியன் டாலர் அளவிலான அன்னிய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது 2021 முதல் காலாண்டை காட்டிலும் 16 சதவீதம் அதிகமாகும்.
1.46 பில்லியன் டாலர் திட்டம்
இதேபோல் இலங்கை முதலீட்டு வாரியம் தற்போது 1.46 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்தியா, சீனா, பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த 49 முதலீட்டுத் திட்டங்களை முடிவு எடுக்கக் காத்திருக்கிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications