மும்பை: அதானி குழுமம் சில தினங்களுக்கு முன்பு தான் சிமெண்ட் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க உள்ளதாகவும், நாட்டின் முன்னணி லாபகரமான சிமெண்ட் தயாரிப்பாளராக உருவாக உள்ளதாகவும், அக்குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி கூறினார்.
சமீபத்தில் தான் அம்புஜா சிமெண்ட் மற்றும் ஏசிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஹோல்சிம் குழுமத்திடம் இருந்து அதானி வாங்கியது.
இதன் மதிப்பு 6.5 பில்லியன் டாலராகும். இதன் மூலம் இந்தியாவின் முனனணி சிமெண்ட் உற்பத்தியாளர்களில் ஒருவராக அதானி குழுமம் உருவெடுத்துள்ளது.
பங்குக்கு எதிராக கடனா?
இதற்கிடையில் அதானி குழுமம் இந்த கையகப்படுத்தலுக்கு பிறகு, வெளி நாட்டு வங்கிகளில் அம்புஜா மற்றும் ஏசிசி பங்குகளை பிணையமாக வைத்து சில பில்லியன் டாலர் நிதியினை திரட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
எவ்வளவு பங்கு?
அதானி குழுமம் சமீபத்திய மாதங்களாகவே இந்த கையகப்படுத்தல் குறித்த பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில், அம்புஜா சிமெண்டில் 63.15% பங்கும், ஏசிசி சிமெண்டில் 56.69% பங்கினையும் (இதில் அம்புஜா சிமெண்ட் மூலமும்) வாங்கியுள்ளது. தற்போது நாட்டிலேயே மிகப்பெரிய நாட்டிலேயே மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளராக மாற விரிவாக்கம் செய்யும் பொருட்டு நிதி திரட்டும் பணியிலும் இறங்கியுள்ளது.
அல்ட்ராக்டெக்கு- அடுத்து அதானி
கடந்த செப்டம்பர் 16 அன்று பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி சிமெண்ட்ஸ் இரண்டினையும் ஹோல்சிம்மிடம் இருந்து முழுமையாக கையபற்றியதாக, பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அல்ட்ராக்டெக் சிமெண்டிற்கு அடுத்ததாக அதானி குழுமம் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது.
எவ்வளவு கடன்
இந்த வெற்றிகரமான கையகப்படுத்தலுக்கு பிறகு 14 சர்வதேச வங்கிகளிடம் இருந்து, 4.5 பில்லியன் டாலர் நிதியினை இந்த நிறுவனம் கடனாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பார்க்லேஸ் வங்கி மற்றும் டாய்ச் பேங்க் ஏஜி உள்ளிட்டவையும் அதானி குடும்பத்திற்கு ஆலோசகர்களாக செயல்பட்டுள்ளன. ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியும் ஆலோசகராக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒப்புதல்
இதற்கிடையில் அம்புஜா சிமெண்ட்ஸ் நிர்வாகக் குழு, அம்புஜா நிறுவனத்திற்கு 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை வாரண்டுகள் மூலம் பெற ஒப்புதல் அளித்துள்ளது. இது மேற்கொண்டு இந்த சிமெண்ட் குழுமத்தியினை பிரம்மாண்ட விரிவாக்கம் செய்யவும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல முக்கிய நபர்கள் நியமனம்
முன்னதாக அதானியின் மூத்த மகன் இயக்குனர் குழுவில் நியமிக்கப்பட்ட நிலையில், அவருடன் எஸ்பிஐயின் முன்னாள் தலைவர் ரஜ்னீஷ் குமார், மகேஸ்வர் சாஹு, அமீத் தேசாய், பூர்வி ஷெத், அஜய் கபூர் என பலரும் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications