ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியான பின்பு அதானி குழுமம் புதிய முதலீடுகளையும், புதிய கடன்களையும் பெறுவதில் அதிகளவிலான தடுமாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. முதலீட்டை ஈர்க்க அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளில் இன்வெஸ்டார் ரோட்ஷோ நடத்தி வருகிறது அதானி குழுமம், ஆனாலூம் பலன் அளிக்கவில்லை.
இந்த நிலையில் அதானி குழுமம் தனது புதிய ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்காக, தற்போது தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ரியல் எஸ்டேட் சொத்துக்களில் தனது வர்த்தகத்திற்கு தொடர்பு இல்லாமல் இருக்கும் NON CORE ரியல் எஸ்டேட் சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தையை துவங்கியுள்ள கௌதம் அதானியின் அதானி குழுமம் ஒரு சில ரியல் எஸ்டேட் சொத்துக்களை விற்பனை செய்து புதிய ரியல் எஸ்டேட் திட்டங்களில் தான் முதலீடு செய்ய உள்ளது, இதனால் வர்த்தகத்தில் எவ்விதமான புதிய மாற்றங்களும் இருக்காது.
தற்போது வெளியாகியுள்ள தகவல் படி மும்பையில் மிகவும் பிரபலமாக இருக்கும் பந்தரா குர்லா காம்பிளக்ஸ் பகுதியில் அதானி ரியாலிட்டி நிறுவனத்திற்கு சொந்தமான Inspire BKC பகுதியை மொத்தமாக 650 கோடி ரூபாய் மதிப்பீட்டுக்கு விற்பனை செய்ய ப்ரூக்பீல்டு அசட் மேனேஜ்மென்ட் உட்பட பல முன்னணி நிறுவனங்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
Inspire BKC என்பது சுமார் 800000 சதுரடி கொண்ட பிரம்மாண்ட அலுவலக கட்டடமாகும். தற்போது இந்த அலுவலகங்களில் Novartis, Reliance Nippon Life Insurance மற்றும் MUFG Bank போன்ற பல முன்னணி நிறுவனங்கள் குத்தகைக்கு உள்ளது. 800000 சதுரடிக்கும் தற்போது குத்தகைதாரர்கள் உள்ளனர்.
இதேபோல் கௌதம் அதானியின் அதானி குழுமம் கடந்த ஆண்டு கைபற்றிய ACC நிறுனக்திற்கு சொந்தமாக 16 ஏக்கர் நிலம் மும்பை-க்கு அருகில் உள்ள தானே-வில் சுமார் 16 ஏக்கர் நிலம் உள்ளது. இதையும் விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக விளங்கும் அதானி குழும நிறுவன பங்குகள் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வந்த நிலையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை அதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு அதானி குழுமம் மீது வைத்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய செபிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு, இந்த விசாரணை பரபரப்பாக நடந்து வந்தாலும் இதுவரையில் அதானி குழுமத்திற்கு எதிராக எவ்விதமான ஆதாரமும் திரட்டப்படவில்லை என சுப்ரீம் கோர்ட் நியமித்த சிறப்பு குழு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications