இந்திய பங்குச்சந்தையில் கடந்த சில நாட்களான தனது நிறுவன பங்குகளின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதன் வாயிலாக அதிகளவிலான சொத்து மதிப்பை இழந்த கௌதம் அதானி, இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி மிகவும் சிறப்பான பாதையில் உள்ளது.
அடுத்த 20 வருடத்தில் இந்தியாவின் பொருளாதாரம் சுமாப் 15 டிரில்லியன் டாலர் மதிப்பில் உயரும் பாதையில் உள்ளது என இந்தியாவின் 2வது பெரும் பணக்காரர் ஆன கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரம்
கொரோனாவுக்கு முன்பு இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 2.89 டிரில்லியன் டாலர் மட்டுமே, கொரோனா முதல் அலையில் நாட்டின் பொருளாதாரம் சுமார் 7 சதவீதம் மொத்தமாக மாயமானது வரலாற்றின் மிகப்பெரிய சரிவு.
3வது கொரோனா அலை
இந்நிலையில் 2வது அலையில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் பொருளாதாரப் பாதிப்பு என்பது சிறிய அளவீடு மட்டுமே, ஆனால் 3வது அலை வருவதாகக் கூறப்படுவதால் இதன் பாதிப்பு மேலும் மோசமடையலாம்.
கௌதம் அதானி
கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழுமத்தின் வருடாந்திர கூட்டத்தில், மத்திய அரசு அடுத்த 4 வருடத்தில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் அளவிலான பொருளாதாரத்தை அடையும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளதே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, கௌதம் அதானி பதில் அளித்துள்ளார்.
15 டிரில்லியன் டாலர்
கௌதம் அதானி அதில், தனிப்பட்ட முறையில் இந்தக் கேள்வி பொருத்தமற்ற கேள்வி, கட்டாயம் இந்தியா 5 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை அடைவது மட்டும் அல்லாமல், அடுத்த 20 வருடத்தில் 15 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை அடையும் எனக் கூறியுள்ளார்.