இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் 2வது இடத்தில் இருக்கும் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம், சமீப காலமாக பல பிரச்சனைகளை எதிர்கொண்டு இருக்கும் வேளையில், முக்கிய நிறுவனத்தில் இருந்து சேர்மன் பதவியில் இருந்து வெளியேறியுள்ளார்.
அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனத்தின் நிர்வாக தலைவர் பதவியிலிருந்து கௌதம் அதானி விலகியதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் 5 முதல் இப்பதவியில் இருந்து விலக உள்ளதாக பங்குச்சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதானி போர்ட்ஸ் & SEZ நிறுவனத்தின் நிர்வாக தலைவர் பதவியில் இருந்து கௌதம் அதானி வெளியேறிய நிலையில், இவர் தொடர்ந்து Non-Executive Chairman ஆக பதிவி வகிப்பார். ஆனால் இந்த பதவியின் கீழ் அவருக்கு நிர்வாக முடிவுகளை எடுக்கும் நேரடி அதிகாரம் இல்லை. இதேபோல் மனிஷ் கேஜ்ரிவால் என்பவரை புதிதாக கூடுதல் நிர்வாக தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
அதானி போர்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மானிஷ் கேஜ்ரிவாலை மூன்று ஆண்டு காலத்திற்கு கூடுதல் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார். மானிஷ் கேஜ்ரிவால் ஒரு தனியார் பங்கு முதலீட்டு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக அதிகாரி ஆவார், இவரது நியமனம் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களுக்கு புதிய பரிமாணத்தை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அதானி போர்ட்ஸ் தற்போது இந்தியாவின் மொத்த சரக்கு போக்குவரத்தில் 27.8 சதவீத பங்கு மற்றும் கண்டெய்னர் சந்தையில் 45.2 சதவீத பங்கைக் கொண்டு பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இது நிறுவனத்தின் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. இந்த வளர்ச்சி, கௌதம் அதானியின் தலைமையின் கீழ் எட்டிய முக்கிய மைல்கல்.
கௌதம் அதானி தான் அதானி குழுமத்தின் தலைவர் மற்றும் நிறுவனர், அவரது தலைமையின் கீழ், அதானி குழுமம் உலகளாவிய உள்கட்டமைப்பு சாம்ராஜ்ஜியமாக வளர்ந்துல்ளது. அதானி குழுமம் தற்போது விமான நிலைய நிர்வாகம் முதல் துறைமுக வர்த்தகம் வரையிலும், போக்குவரத்து உள்கட்டமைப்பு மூலம் எனர்ஜி துறைகளில் இயங்கி வருகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications