30% அதிக சம்பளம் தரும் ஜிசிசி-கள்.. அதிர்ச்சியிஸ் TCS, இன்போசிஸ், HCL..!

பெங்களூரு: பன்னாட்டு நிறுவனங்கள் குளோபல் கெப்பாபிலிட்டி சென்டர்கள் (global capability centres (GCCs) )எனப்படும் ஜிசிசி மையங்களை இந்தியாவில் நிறுவுவதற்கு ஆர்வம் காட்டுகின்றன. இத்தகைய பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகள் இந்தியாவில் அமைக்கப்படும் போது நுழைவு நிலையிலேயே அதிக அளவிலான ஊதியம் வழங்குவதாக டீம் லீஸ் டிஜிட்டல் (TeamLease Digital) என்ற நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

TeamLease Digital என்பது பல்வேறு நிறுவனங்களுக்கும் ஊழியர்களை தேர்வு செய்து வழங்கக்கூடிய ஒரு நிறுவனமாகும் . இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஜிசிசி மையங்களில் தற்போது வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது என தெரிவிக்கிறது.

30% அதிக சம்பளம் தரும் ஜிசிசி-கள்.. அதிர்ச்சியிஸ் TCS, இன்போசிஸ், HCL..!

மேலும் தற்போது இருக்கும் இண்டஸ்ட்ரி ஸ்டாண்டர்டை விட திறமையான ஊழியர்களுக்கு 30% வரை அதிக ஊதியம் தருவதற்கு இந்த ஜிசிசி மையங்கள் தயாராக இருக்கின்றன என தெரிவிக்கிறது. இந்த போக்கு அடுத்த ஓராண்டு காலத்தில் 40 சதவீதம் என்ற அளவை கூட எட்டும் என தெரிவிக்கிறது.

அதேபோல ஐடி சேவை பிரிவுகளிலும் சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட், டேட்டா இன்ஜினியரிங் மற்றும் கிளவுட் டெக்னாலஜிஸ் ஆகியவற்றில் திறன் வாய்ந்த ஃபிரஷர்களுக்கு 20 முதல் 25 சதவீதம் வரை அதிக ஊதியத்துடன் வேலை வாய்ப்பு கிடைக்கிறது என தெரிவிக்கிறது.

எனவே ஐடி துறையில் வேலை தேடுவோர் இந்த பிரிவுகளில் திறன் பெற வேண்டும் என கூறுகிறது. மத்திய அளவிலான வேலைகளில் ஊதிய உயர்வு என்பது 7 முதல் 10 சதவீதமாக இருக்கிறது என கூறப்படுகிறது.

மூத்த மேலாண்மை அளவிலான வேலைகளில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் 21% வரை அதிக ஊதியத்துடன் வேலைகள் கிடைக்கின்றன என இந்த நிறுவனம் கூறுகிறது. டேட்டா இன்ஜினியரிங், ப்ராடக்ட் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பிரிவுகளில் ஊதிய உயர்வு கணிசமாக இருக்கிறது என இந்த நிறுவனம் கூறுகிறது.

அது மட்டும் இன்றி AWS மற்றும் Microsoft Azure போன்ற சான்றிதழ்களை பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்கிறதாம். 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் கிளவுட் கம்ப்யூட்டிங் துறையில் நிபுணத்துவம் பெற்ற 20 லட்சம் பேர் தேவைப்படுகின்றனர் என இந்த நிறுவனம் கூறுகிறது. எனவே இந்த பிரிவில் திறன் பெற்றவர்கள் விரைவில் நல்ல ஊதியத்துடன் வேலை வாய்ப்பை பெறுவார்கள் என சொல்லப்படுகிறது.

தற்போது ஐடி உள்ளிட்ட துறைகளில் வேலையில் இருப்பவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப திறன்களை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது தான் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. எனவே நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்களுடைய திறன்களை மேம்படுத்திக் கொள்பவர்களுக்கு வரும் காலம் வசந்த காலமாக இருக்கும் என டீம் லீஸ் டிஜிட்டல் நிறுவனம் கூறுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+