சர்வதேச அளவில் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் வேளையில் புதிய வர்த்தகத்தை பெறுவது பெரும் தலைவலியாக இருப்பதாக இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் புலம்பி வரும் வேளையில் GCC நிறுவனத்தால், இந்திய ஐடி சேவை நிறுவனங்களான TCS, Infosys, Wipro, HCL புதிய பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
குளோபல் கேப்பபிலிட்டி சென்டர்கள் (GCC) என அழைக்கப்படும் பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய டெலிவரி சென்டர்களின் வருகையும், அதிக்கமும் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் சம்பள உயர்வில் தாமதம், வேரியபிள் பே குறைப்பு, பதவி உயர்வை தற்காலிமாக நிறுத்தி வைத்தல் போன்ற நடவடிக்கைகளை சமீபத்தில் எடுத்து வருகிறது.

இதனால் ஐடி ஊழியர்கள் வேறு வேலைவாய்ப்புகளை தேட துவங்கி GCC நிறுவனத்தில் சேர துவங்கியுள்ளனர். இந்திய ஐடி சேவை நிறுவனத்தின் புதிய வேலைவாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை. சொல்லப்போனால் பெரும்பாலான ஐடி சேவை நிறுவனங்கள் புதிதாக ஊழியர்களை சேர்ப்பதை பெரிய அளவில் குறைத்துள்ளது, சில நிறுவனங்கள் நிறுத்தியுள்ளது.
இந்தியாவில் இருக்கும் ஜிசிசி நிறுவனங்களில் தற்போது 16.8 லட்சம் பேர் பணியாற்றி வரும் வேளையில், 2026 ஆம் ஆண்டுக்குள் இதன் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. காரணம் இந்தியாவில் புதிதாக ஜிசிசி கிளைகள் துவங்கப்படுவது மட்டும் அல்லாமல் ஏற்கனவே இருக்கும் நிறுவனங்கள் விரிவாக்கம் அடைந்தும் வருகிறது.
இதனால் TCS, Infosys, Wipro, HCL நிறுவனங்களில் இருக்கும் 4-10 வருட அனுபவம் கொண்ட ஐடி ஊழியர்கள், ஜிசிசி நிறுவனங்களுக்கு 30 - 40 சதவீத சம்பள உயர்வுடன் மாறி வருகின்றனர். இதனால் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் வெளியேறும் ஊழியர்களை தக்க வைக்கவும், புதிதாக ஊழியர்களை நியமிக்கவும் அதிகப்பணத்தை செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இதை தாண்டி ஹெச்சிஎல், இன்போசிஸ் ஆகியவை டிசம்பர் காலாண்டில் ஊழியர்களுக்கான சம்பள உயர்வை அளிக்க துவங்கியுள்ள காரணத்தால் கூடுதல் நிதி சுமை உருவாக உள்ளது. ஐடி சேவை நிறுவனங்களின் மொத்த வருவாயில் சம்பளத்திற்கான செலவுகளின் பங்கீடு மட்டுமே செப்டம்பர் மாதத்தில் 56.6 சதவீதமாக உள்ளது.
தற்போது ஜிசிசி நிறுவனங்கள் இந்த மோசமான காலக்கட்டத்திலும் ஜிசிசி நிறுவனங்கள் அதிகப்படியான ஊழியர்களை சேர்க்கும் காரணத்தால் ஐடி நிறுவனங்கள் முக்கியமான திறன்வாய்ந்த ஊழியர்களை இழந்து வருகிறது.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications