ஐடி நிறுவனங்களை விட அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திய ஜிசிசி மையங்கள்..

சென்னை: பன்னாட்டு நிறுவனங்களின் ஜிசிசி மையங்களில் (Global capability centres (GCCs)) அதிக அளவில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஐடி நிறுவனங்களை விட ஜிசிசி மையங்கள் வேலை வாய்ப்புகளை 27 சதவீதம் வரை உயர்த்தி உள்ளன.

பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய திறன் கிளைகளை இந்தியாவில் நிறுவுவதற்கு மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றன. இவ்வாறு வரக்கூடிய நிறுவனங்களின் ஜிசிசி மையங்கள் மூலம் இந்தியாவில் வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது. பெங்களூரு, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்கள் ஜிசிசி மையங்களின் விருப்பமான இடமாக கருதப்படுகிறது.

ஐடி நிறுவனங்களை விட அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திய ஜிசிசி மையங்கள்..

ஜிசிசி மையங்களில் குறிப்பிட்ட துறை சார்ந்த நிபுணர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்து இருக்கிறது . பொறியியல், ஆய்வு மற்றும் மேம்பாட்டு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு ஜிசிசி மையங்கள் அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்பை வழங்குகின்றன. வாகன உற்பத்தி ,விமான போக்குவரத்து, வங்கி, நிதி சார்ந்த பல்வேறு செயல்பாடுகளுக்கும் ஜிசிசி மையங்களில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

2025 நிதியாண்டில் ஜிசிசி மையங்கள் 1,40,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது. இது 2024 ஆம் நிதி ஆண்டில் வெறும் 60,000 ஆக தான் இருந்தது. 2026 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 1,80,000 ஆக அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. அது தவிர இந்தியாவில் புதிதாக 100 ஜிசிசி மையங்கள் அமைக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் தற்போது 1860 ஜிசிசி மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பெங்களூருவில் தான் அமைந்திருக்கின்றன.

அதே வேளையில் இந்தியாவின் முன்னணி ஐந்து ஐடி நிறுவனங்களில் 2024 ஆம் ஆண்டில் புதிதாக 80,000 - 84,000 பேர் வரை பிரஷர்களாக பணிக்கு எடுப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னணி ஐடி நிறுவனங்களில் எல்லாம் 2025 ஆம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 11 ஆயிரம் பேர் மட்டுமே புதிதாக வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

எனவே இந்தியாவில் தற்போது ஐடி பிரிவில் வேலை வாய்ப்பு மந்தமடைந்திருப்பதும் ஜிசிசி மையங்களில் வேலை வாய்ப்பு அதிகரித்து இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஜிசிசி மையங்களை அமைப்பதற்கு மத்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு நிதி உதவிகளை வழங்குகின்றன.

சைபர் செக்யூரிட்டி, ஏஐ, டேட்டா அனலிட்டிக்ஸ் மற்றும் டேட்டா கவர்னன்ஸ் ஆகிய பிரிவுகளில் வேலை வாய்ப்பு உயர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐடி நிறுவனங்களை விட ஜிசிசி மையங்கள் 20 - 25% வரை அதிக ஊதியத்தில் ஆட்களை வேலைக்கு தேர்வு செய்கின்றன. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் ஜிசிசி மையங்களின் எண்ணிக்கையும் அது சார்ந்த வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+