GCC அப்ரென்டிஸ்ஷிப் திட்டத்தில் மாற்றம்.. சூரிய சக்தி, AI துறையில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு..!!

இந்தியாவில் வேலைவாய்ப்பை பெறுவதற்கான பாரம்பரிய வழிமுறைகள் மாறி வருகின்றன. முன்பு தொழிற்சாலைகளில் எளிய வேலைகளை கற்றுக்கொள்வதாக இருந்த தொழில் பழகுநர் (Apprenticeship) பயிற்சி முறை, இப்போது கணினி மற்றும் ஆய்வு சார்ந்த வெள்ளை காலர் வேலைகளுக்கு தேவைப்படும் உயர் திறன்களை கற்றுத்தரும் தளமாக மாறியுள்ளது.

குறிப்பாகச் சூரிய சக்தி, மின்சார வாகனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் உலகளாவிய திறன் மையங்கள் (GCCs) போன்ற வளர்ந்து வரும் புதிய துறைகளில், இளைஞர்களுக்கு ஏராளமான பிரகாசமான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

GCC அப்ரென்டிஸ்ஷிப் திட்டத்தில் மாற்றம்.. சூரிய சக்தி, AI துறையில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு..!!

முன்பு, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களை வைத்திருக்கும் நிறுவனங்கள், சட்டப்படி கட்டாயம் பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற சட்ட கடமையாகவே இந்த அப்ரென்டிஸ்ஷிப் பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. நிறுவனங்கள் இதை, தங்களுக்கு தேவையான திறமையான பணியாளர்களை உருவாக்கும் ஒரு நிலைத்த முதலீட்டு உத்தியாக கருதுகின்றன.

Team Leach Try Apprenticeship நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி நிபுன் ஷர்மா கூறுகையில், "நிறுவனங்கள் இப்போது இந்தப் பயிற்சி முறையைத் திறமை மேம்பாடு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் முதலீட்டிற்கு அதிக வருவாய் பெறுவது ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.

பயிற்சியை முடிப்பவர்களில் முக்கால்வாசிக்கும் அதிகமானோர் அதே நிறுவனத்தில் முழு நேரப் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். இது நிறுவனத்தின் உற்பத்தித்திறன் மற்றும் பணியாளர்களை தக்கவைக்கும் திறனை அதிகரிக்கிறது" என்று கூறியுள்ளார்.

தொழில் பழகுநர் பயிற்சிகள் இப்போது அறிவு சார்ந்த பணிகளுக்கு தேவைப்படுவதால், இளைஞர்கள் தொழிற்சாலைகளில் உள்ள இயந்திர வேலைகளை கற்றுக்கொள்வதற்கு பதிலாக, தரவுப் பகுப்பாய்வாளர்கள் (Data Analysts), செயற்கை நுண்ணறிவு விஞ்ஞானிகள் (AI Scientists), நிதி ஆய்வாளர்கள், மென்பொருள் உருவாக்குநர்கள் போன்ற உயர்தரப் பணிகளுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறார்கள்.

GCC நிறுவனங்களின் மாற்றம் : பன்னாட்டு நிறுவனங்களின் திறன் மையங்கள் அனுபவம் வாய்ந்தவர்களை மட்டுமே நம்பியிருந்த நிலையில் இருந்து மாறி, தற்போது உள்நாட்டுத் திறமைகளை வளர்க்கும் நோக்கில், இந்தப் பயிற்சி திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றன.

பசுமைப் பொருளாதாரம் : மின்சார வாகனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளில், இந்தப் பயிற்சி முறை, புதிய தலைமுறை தொழில்நுட்ப வல்லுநர்கள், அசெம்ப்ளி ஆபரேட்டர்கள் மற்றும் தரவு வல்லுநர்களைத் தயார் செய்து, நாட்டின் பொருளாதாரப் பன்முகத்தன்மைக்குப் பங்களிக்கிறது.

2025-ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட விதிகளின்படி, பட்டப் படிப்புடன் இணைந்த தொழில் பழகுநர் திட்டங்கள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய முறை, கல்லூரி படிப்புடன் சம்பளத்துடன் கூடிய கள பயிற்சியை ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம், ஒரு மாணவர் வெறும் 6 மாதங்களில் சான்றிதழ், 24 மாதங்களில் டிப்ளோமா மற்றும் 36 மாதங்களில் பட்டத்தையும் பெற முடியும். இந்தக் கல்வி மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பு, ஊழியர்கள் வேலையை விட்டுச் செல்லும் விகிதத்தைக் குறைத்து, நிறுவனங்களின் உற்பத்தித்திறனை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இந்தப் பயிற்சி முறையின் வளர்ச்சி இன்னும் குறைவாகவே (0.27%) உள்ளது. ஆனால், இதை மேம்படுத்துவதன் மூலம், அடுத்த சில ஆண்டுகளில் 20 மில்லியன் பயிற்சியாளர்களை உருவாக்கி, இந்தியாவின் மக்கள் தொகை அனுகூலத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியும் என்று ஷர்மா வலியுறுத்தியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+