ஆக்சிஸ் வங்கியின் டிஜிட்டல் வணிகம் மற்றும் டிரான்ஸ்ஃபார்மேஷன் தலைவர் சமீர் ஷெட்டி சமீபத்தில் திங்க் ஸ்கூல் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ஜென்Z தலைமுறையின் எந்த அளவுக்கு கடனில் மூழ்கியுள்ளனர் என்பதை புட்டு புட்டு வைத்தது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
இந்தியாவின் இளம் தலைமுறையான ஜென் Z, மக்கள் தொகையில் 28-30 சதவீதம் பங்கு விகிக்கின்றனர். வங்கி டெபாசிட்களில் அவர்களின் பங்கு வெறும் 4 சதவீதம் மட்டுமே இருக்கும் போது, பர்சனல் மற்றும் கன்ஸ்யூமர் கடன்களில் ஜென் Z மக்களின் பங்கீடு சுமார் 50 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்த ஏற்றத்தாழ்வு இளைஞர்களின் செலவு பழக்கத்தை படம் போட்டு காட்டுகிறது.

மேலும் சமீர் ஷெட்டி கூறுகையில், பல ஜென் Z இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் சேமிப்பு குறைவாக இருப்பது இயல்பு. ஆனால் அதிகரித்து வரும் நுகர்வு போக்கு முக்கியமானதாக விளங்குகிறது, அவர்கள் அதிகம் செலவு செய்வதால் வங்கி கணக்குகளில் இருப்பு குறைவாக உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், ரூ.50,000-க்கு கீழ் உள்ள சிறு கடன்கள் மொத்த கடன்களில் சுமார் 75 சதவீதம் வரையில் ஜென் Z மக்கள் பங்கீடு வகித்த காலமும் இருந்துள்ளதாக சமீர் ஷெட்டி கூறுகிறார். இந்த சிறு கடன்கள் என்பது பெரும்பாலும் பாதுகாப்பற்ற தனிப்பட்ட கடன்கள் மற்றும் சிறு நுகர்வு கடன்களாக உள்ளன. இந்த கடன்களை வைத்து பெரும்பாலாலும் ஷாப்பிங் செய்ய பயன்படுத்தப்படுகிறது, அல்லது வாழ்க்கையை வாழ்வதற்காக செலவு செய்யப்படுவது வழக்கம்.
ஜென் Z மக்கள் அதிகளவில் கடன் வாங்க மூன்று முக்கிய காரணங்கள் உள்ளது. இத்தலைமுறையினர் மத்தியில் அதிகரிப்படியான நுகர்வு அதாவது பொருட்களை வாங்கி குவிக்கும் வழக்கம் உள்ளது, அடுத்தாக கடன் எடுக்கும் மனப்பான்மை அதிகமாக உள்ளது, மூன்றாவதாக எளிதான கடன் வசதி இவர்களின் கைக்கு எட்டும் தொலைவில் உள்ளதால் இவர்கள் அதிகமாக கடன் வாங்குகின்றனர்.
இத்தலைமுறை இளைஞர்களிடம் பணத்தை விளையாட்டாக பார்க்கும் மனநிலை அதிகரித்துள்ளது.
இதை விளக்கும் வகையில் சமீர் ஒரு உதாரணத்தையும் வெளியிட்டு உள்ளார். ஆதாவது இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் சந்தாதாரர்கள் சுமார் 5.8 கோடி பேர் மட்டுமே உள்ளனர். ஆனால் நாட்டின் மிகப்பெரிய ரியல் மணி கேமிங் தளத்தில் 26 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர், மியூச்சுவல் பண்ட்-ஐ காட்டிலும் ஐந்து மடங்கு அதிகம். இது இளைஞர்கள் நீண்ட கால முதலீட்டை (SIP போன்றவை) விட விரைவான லாபத்தை தேடுவதை அதிகம் விரும்புவதை காட்டுகிறது என தெரிவித்தார்.
ஜென் Z இளைஞர்கள் இந்திய மக்களின் பாரம்பரிய சேமிப்பு முறை மற்றும் செலவு செய்யும் விதிகளை மாற்றி வருகின்றனர். அவர்கள் சேமிப்பை விட கடன் பெற்று வாழ்க்கையை அனுபவிக்கவே அதிகமாக விரும்புகின்றனர். ஆனால் இது நீண்ட கால நிதி ஒழுக்கம், சேமிப்பு பழக்கம், செல்வ உருவாக்கம் ஆகியவற்றுக்கு ஆபத்து என்பது தான் தற்போதைய பிரச்சனை.
மில்லினியல் மக்கள் இதை கேட்டால் மனசு கட்டாயம் பதறும், இதேபோல் ஜென் Z பிள்ளைகளின் பெற்றோர்களாக ஜென் X தலைமுறையினர் பெரும்பாலும் நிரந்தர வேலை, போதுமான அளவுக்கு நிதி ஆதாரம் கொண்டு இருக்கும் காரணத்தால் ஜென் Z பிள்ளைகள் இத்தகைய மனநிலையில் உள்ளதாகவும் கருத்து நிலவுகிறது. Financial Insecurity என்ற ஒரு விஷயம் மில்லினியல் மற்றும் அவர்களுக்கு முந்தைய தலைமுறையினருக்கு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?



Click it and Unblock the Notifications