ஜெனரேட்டிவ் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது, இதனை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவன முதலீட்டாளர்களுக்கு கடிதம் எழுதி இருக்கும் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரன் ஜெனரேட்டிவ் ஏஐ என்பது தொழில்நுட்ப சுழற்சி மட்டும் கிடையாது இது ஒரு நாகரிக மாற்றம் எனக் கூறியிருக்கிறார்.
டிசிஎஸ் நிறுவன பங்குதாரர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கும் அவர், 2024 ஆம் ஆண்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு சக்தியாக ஜெனரேட்டிவ் ஏஐ இருந்தது என குறிப்பிட்டுள்ளார். மனித சிந்தனைக்கு மிக நெருக்கமான ஒரு திறன் கொண்ட தொழில்நுட்பமாக ஜெனரேட்டிவ் ஏஐ உருவாகி இருக்கிறது இது ஒரு தொழில்நுட்ப சுழற்சி மட்டுமல்ல இது ஒரு நாகரிக மாற்றம் என தெரிவித்திருக்கிறார்.

செமி கண்டக்டர், கிளவுட் கம்ப்யூட்டிங் , குவாண்டம் தொழில்நுட்பம் ,ரோபோடிக்ஸ் மற்றும் எரிசக்தி துறையில் புதிய கண்டுபிடிப்புகள் என பல்வேறு துறைகளும் இந்த ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தால் பெரிய மாற்றம் கண்டு இருக்கிறது என என்.சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ளார். ஜெனரேட்டிவ் ஏஐ ஏற்கனவே தரவு பகுப்பாய்வு ,வாடிக்கையாளர் சேவை மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற துறைகளில் எல்லாம் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது என குறிப்பிட்டு இருக்கும் அவர் தானாகவே செயல்படக்கூடிய ரோபோக்கள் மற்றும் ஏஐ ஏஜென்ட்களை இனி அதிகம் பார்க்கலாம் என கூறுகிறார்.
குறிப்பாக தொழிற்சாலைகளில் இத்தகைய ரோபோக்கள் செயல்பாடு அதிகமாகவும், நிறுவனங்களில் எல்லாம் ஏஐ ஏஜெண்ட்களின் செயல்பாடுகள் இனி அதிகரிக்கும் என்பதையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். டிசிஎஸ் நிறுவனம் பல்வேறு பிரிவுகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தை இணைத்து செயல்படுத்தி வருகிறது என கூறி இருக்கும் அவர் இந்த துறையிலேயே அதிக அளவு ஏஐ பயிற்சி பெற்ற பணியாளர்கள் கொண்ட நிறுவனமாக டிசிஎஸ் செயல்படுகிறது என சுட்டிக்காட்டி உள்ளார். கூடிய விரைவில் டிசிஎஸ் நிறுவனம் மனிதர்களோடு இணைந்து பணியாற்றும் வகையில் ஏஐ ஏஜென்டுகளை அதிகரிக்கப் போவதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் மனிதர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் திறன் ஆகிய இரண்டையும் இணைத்து புதிய தயாரிப்புகளையும் தீர்வுகளையும் வழங்குவது, டேட்டா மையங்கள் மற்றும் கிளவுட் உள் கட்டமைப்புகளை உருவாக்குவது உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தப் போவதாக அவர் தெரிவித்தார். ஐடி மற்றும் அது சார்ந்த தொழில் சேவைகள் அனைத்துமே தானியங்கு செயல்முறை நோக்கி நகர்கின்றன என்பதுதான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகை நமக்கு உணர்த்துகிறது என குறிப்பிட்டு இருக்கும் அவர் ஏஐ காரணமாக மென்பொருள் மேம்பாடு, மென்பொருள் பயன்பாடு உள்ளிட்டவை பெரிய மாற்றம் கண்டு இருக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறார்.
2025 ஆம் தேதியானில் டிசிஎஸ் நிறுவனம் 30 பில்லியன் டாலர்கள் வருவாய் என்ற புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது என்றும் அவர் பங்குதாரர்களுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications