பொதுத்துறை வங்கி ஊழியர்களை தொடர்ந்து, பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்களும், எல் ஐ சி ஊழியர்களும் இரு நாட்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.
இது குறித்த அறிவிப்பில் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்கள் மற்றும் எல் ஐ சி ஊழியர்களும் இணைந்து மார்ச் 17 மற்றும் மார்ச் 18 அன்று போராட்டம் நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த வேலை நிறுத்தமானது எல்ஐசி பங்கு விற்பனை எதிர்த்து செய்யப்படவுள்ளது.
இரு நாட்கள் வேலை நிறுத்தம்
அரசு நிதி திரட்டும் பொருட்டு எல் ஐ சி நிறுவனத்தின் பங்குகளை பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம் விற்க திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசு பட்ஜெட் 2021 - 22ல் இலக்கினையும் நிர்ணயித்துள்ளது. இதற்கிடையில் இந்த பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மார்ச் 17 அன்று பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்களும், மார்ச் 18 அன்று எல் ஐ சி ஊழியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே போராட்டம்
நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கு மேல் பணிபுரிந்து வரும் ஊழியர்கள், எல்.ஐ.சி. தனியார்மயமாக்கப்படுவதற்கு தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் அதன் தொழிற்சங்கங்கள் ஏற்கனவே சில முறை போராட்டத்தில் குதித்தன.
எல் ஐ சி போன்ற வளர்ச்சி அடைந்த நிறுவனத்தை பங்கு முதலீட்டில் ஏன் கொண்டு வர வேண்டும்? சுமார் 10 சதவீத பங்குகளை தனியாருக்கு கொடுப்பதன் மூலம் எல்ஐசி-யில் தனியாரின் ஆதிக்கம் படிப்படியாக அதிகரிக்கும்.
அரசு பரிசீலனை செய்ய வேண்டும்
எல்.ஐ.சி. பொது மக்களின் சொத்தாகும். இது மக்கள் இயக்கமாக மாற எதிர்க்க வேண்டும். பாலிசிதாரர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. எனவே மத்திய அரசு இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல கருத்துகளை வலியுறுத்தி இந்த போராட்டங்களை ஊழியர்கள் செய்யவுள்ளனர்.
வங்கி ஊழியர்கள் போராட்டம்
ஏற்கனவே மார்ச் 15 மற்றும் மார்ச் 16 அன்று பொதுத்துறை வங்கிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இதனைத் தொடர்ந்து இன்சூரன்ஸ் ஊழியர்களும் போராட்டத்தினை அறிவித்துள்ளனர்.
மத்திய அரசு கூறியதுபோல பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்பட்டால், வங்கி ஊழியர்களின் வேலை பறிபோகும் நிலைக்கு தள்ளப்படலாம் என வங்கி ஊழியர் சங்கங்கள் அஞ்சுகின்றன. இதனால் மத்திய அரசு இது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வங்கிகள் ஊழியர்கள் கூறுகின்றனர். இந்த நிலையிலேயே வங்கி ஊழியர் சங்கங்கள் வங்கி போராட்டத்தினை கையிலெடுத்தன.
அரசுக்கு வேண்டுகோள்
எல்.ஐ.சி நிறுவன பங்குகளை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது, எல்.ஐ.சியை தனியார்மயமாக்குவது, காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை 49%ல் இருந்து 74% உயர்த்துவது என மத்திய அரசு அறிவித்தது. இதனால் வளர்ச்சி திட்டங்களில் எல்.ஐ.சி நிறுவனம் பங்கு பெரிதும் பாதிக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து இன்சூரன்ஸ் ஊழியர்களும் போராட்டத்தினை அறிவித்துள்ள நிலையில், அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே இங்கு அனைவரின் கோரிக்கையாகும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications