உலகளாவிய அளவில் புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் போர், அமெரிக்கா-வெனிசுலா இடையேயான பதட்டங்கள், கிரீன்லாந்து மற்றும் ஈரான் பற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கடுமையான நிலைப்பாடுகள் ஆகியவை இந்த அபாயத்தை மேலும் உயர்த்தியுள்ளன.
பூகோள மோதல்கள் உக்கிரமடைய, பல நாடுகள் தங்கள் பாதுகாப்பு பட்ஜெட்டை உயர்த்துகின்றன. டிரம்ப், 2027-க்குள் ராணுவ பட்ஜெட்டை $1.5 டிரில்லியன் ஆக (முந்தைய திட்டத்தை விட 50% அதிகரித்து) முன்மொழிந்துள்ளார். இச்சூழலில் மத்திய அரசும் 2026 மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிக்கும் என ஊகிக்கப்படுகிறது.

வெனிசுலாவில் அமெரிக்க ராணுவம் அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸைக் கைது செய்த நடவடிக்கை உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது, சீனா இந்த குழப்பத்தைப் பயன்படுத்தி தைவான் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்ற அச்சத்தை உருவாக்கியது.
புவிசார் அரசியல் சிக்கலானது; எதிர்கால நிகழ்வுகள் குறித்த ஊகங்கள் மாறுபட்டவை. தைவான் மீதான சீனாவின் அணுகுமுறை, பிராந்திய ராணுவ சமநிலை மற்றும் உள்நாட்டு அரசியல் காரணிகளைப் பொறுத்தே அமையும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
இன்ஃபோமெரிக்ஸ் ரேட்டிங்ஸின் தலைமைப் பொருளாதார நிபுணர் மனோரஞ்சன் ஷர்மா கூறுகையில், "அமெரிக்காவின் லத்தீன் அமெரிக்க நடத்தை வழியே சீனா தைவானைப் பார்க்கவில்லை. தைவான் பெய்ஜிங்கிற்கு ஒரு முக்கிய இறையாண்மைப் பிரச்சனை. சீனாவின் முடிவுகள் ராணுவ சமநிலை, அமெரிக்கக் கூட்டணிகளின் நம்பகத்தன்மை, உள்நாட்டு அரசியல் காரணிகளாலேயே முதன்மையாக உந்தப்படுகின்றன," என்றார்.
வெனிசுலாவிற்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை, தனது நலன்கள் முக்கியமானதாகும்போது உறுதியான நடவடிக்கைக்கு வாஷிங்டன் தயங்காது என சமிக்ஞை செய்து தடுப்புசக்தியை வலுப்படுத்தக்கூடும் என்று ஷர்மா நம்புகிறார். எனினும், "இந்தோ-பசிபிக் ராணுவ நிலைப்பாடு, அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் இடையேயான முத்தரப்பு ஒருங்கிணைப்பு மற்றும் தைவானின் பாதுகாப்பு தயார்நிலை ஆகியவை சீனா மீது அதிகத் தாக்கம் செலுத்துகின்றன, வேறு நிகழ்வுகள் அல்ல," என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அருணாச்சலப் பிரதேச விவகாரத்தில் ஷர்மா, "இந்தியா-அமெரிக்கா மூலோபாய நெருக்கம், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LAC) வழியாக இந்தியாவின் ராணுவத் தயார்நிலை, திபெத்தின் உள்நாட்டு ஸ்திரத்தன்மை அடிப்படையில் இந்தியா மீதான அழுத்தத்தை பெய்ஜிங் சரிசெய்கிறது. இச்செயல்கள் கணக்கிடப்பட்டவை, மூலோபாயமானவை; எதிர்வினைகள் அல்ல," என்றார்.
இந்தியா தனது பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரிக்கும் என பல நிபுணர்கள் நம்புகின்றனர். புவிசார் அரசியல் அபாயங்கள், சீனாவின் ராணுவ விரிவாக்கம், பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியாவின் தற்சார்பு உந்துதலே இதற்குக் காரணங்கள். ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸின் தலைமை முதலீட்டு மூலோபாய நிபுணர் வி.கே.விஜயகுமார், "2026 பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு அதிக ஒதுக்கீடு நிச்சயம்," என்றார்.
கடந்த (FY2025-26) ஆண்டில், இந்திய அரசு பாதுகாப்புத் துறைக்கு ரூ6.8 லட்சம் கோடி ஒதுக்கியது; இதில் ராணுவ நவீனமயமாக்கலுக்கு ரூ1.8 லட்சம் கோடி அடங்கும். இந்த ஆண்டு கணிசமான உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய ஸ்திரமற்ற தன்மையால், இந்தியா ஏற்கெனவே பாதுகாப்புச் செலவினங்களை அதிகரித்து வருவதாக ஷர்மா குறிப்பிட்டார்.
இந்தியாவின் பாதுகாப்பு முடிவுகளுக்கு ஒரு தெளிவான ஐந்தம்சக் கட்டமைப்பு வழிகாட்டுகிறது: (i) சீனாவை நீண்டகால முக்கிய மூலோபாய சவாலாகக் கருதுதல். (ii) சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு தரப்பு மோதலுக்கான தயார்நிலை. (iii) "மேக் இன் இந்தியா" மற்றும் "ஆத்மநிர்பர் பாரத்" திட்டங்கள் மூலம் பாதுகாப்புத் துறையை உள்நாட்டுமயமாக்கல், (iv) இந்தியப் பெருங்கடல் முழுவதும் கடற்படை விரிவாக்கம். (v) ட்ரோன்கள், சைபர் மற்றும் விண்வெளி உட்பட தொழில்நுட்பம் சார்ந்த போர்க்கள முறைக்கு மாறுதல் ஆகியவை இந்த கட்டமைப்பின் பிற முக்கிய அம்சங்களாகும்.
இந்தியா பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டைத் தொடர்ந்து அதிகரித்து, மூலதனச் செலவினங்களுக்கு முன்னுரிமை அளித்து, ஏவுகணைகள், வான் பாதுகாப்பு, கண்காணிப்புத் திறன்களில் அதிக முதலீடு செய்வதாக ஷர்மா தெரிவித்தார். "திடீர் செலவு அதிகரிப்புகளை விட, நிலையான உயர்வுகள், மேம்பட்ட செயல்திறன், தனியார் துறை பங்கேற்பு, கூட்டு உற்பத்தியை அதிகரிப்பதே இந்தியாவின் எதிர்காலப் போக்கு," என்று ஷர்மா கூறுகிறார்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications