ஜெர்மனி நாட்டில் நீண்ட காலமாகக் குடியுரிமை விதிகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் தளர்வு அளிக்க வேண்டும் என்ற பேச்சு அந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்கள், நிறுவனங்கள், அரசியல் வட்டாரங்கள் மத்தியில் இருந்து வருகிறது.
ரஷ்யா - உக்ரைன் போருக்கு முன்பு கூட மொழி தொடர்பான கட்டுப்பாடுகளிலும், விதிமுறைகளிலும் தளர்வு அளிக்கப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஜெர்மனி நாடாளுமன்றத்தில் புதிய குடியுரிமை சட்ட தளர்வுகளுக்கு 382-க்கு 234 வாக்குகள் பெற்று நடைமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இப்புதிய சட்ட திருத்தம் மூலம் ஜெர்மனியில் வெளிநாட்டவர் குடியுரிமை பெறும் விதிமுறைகளில் தளர்வுகளும், இரட்டை குடியுரிமை விதிமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளுக்கும் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தளர்வுகள் மூலம் ஜெர்மனியில் இருக்கும் நிறுவனங்கள் மிகவும் எளிதாகவும், அதிகளவிலும் திறமையான வெளிநாட்டு ஊழியர்களைப் பணியில் அமர்த்த முடியும்.
ஜெர்மனி அரசு தற்போது திருத்தம் செய்துள்ள மாற்றங்கள் மூலம் ஒருவர் அந்நாட்டில் 5 வருடம் தங்கியிருந்தாலே குடியுரிமை பெற முடியும், இதேபோல் சிறப்புத் தனித் திறன் கொண்டவர்கள் வெறும் 3 வருடத்திலேயே குடியுரிமை பெற முடியும், முன்பு இது 8 மற்றும் 6 வருடங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ஜெர்மனியில் பிறக்கும் குழந்தையின் தாய் அல்லது தந்தை வெளிநாட்டவராக இருக்கும் பட்சத்தில் யாரேனும் ஒருவர் 5 வருடம் ஜெர்மனியில் தங்கியிருந்தாலே போதும், குழந்தைக்கு ஜெர்மனி குடியுரிமை பெற முடியும். முன்பு இப்பிரிவில் குழந்தைக்குக் குடியுரிமை பெற பெற்றோர் ஜெர்மனி குடியிருப்புக் காலம் 8 ஆண்டுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனி நாட்டு மக்கள் தொகையில் சுமார் 14 சதவீதம் பேர் அதாவது 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் குடியுரிமை இல்லாமல் உள்ளனர், இதில் 5.3 மில்லியன் மக்கள் ஜெர்மனியில் 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக வசித்து வருகிறார்கள் என்பதை விளக்கி இந்தச் சட்ட திருத்தம் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஜெர்மனி நாட்டு நிறுவனங்கள் வழக்கத்தை விடவும் அதிகமான வெளிநாட்டினரை பணியில் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதோடு இலங்கையில் இருந்து பல ஆயிரம் மக்கள் ஜெர்மனியில் வசித்து வரும் வேளையில் அவர்களுக்கும் குடியுரிமை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் ஜெர்மனியில் பல லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வரும் வேளையில் இவர்களுக்குக் குடியுரிமை பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது இந்தியர்களுக்கு ஜாக்பாட் ஆக உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications