வளைகுடா பகுதியில் நீடித்து வரும் 3 நாடுகள் மத்தியிலான போர் காரணமாக உலகளாவிய எரிபொருள் சந்தையில் ஏற்பட்ட பாதிப்புகள், ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடாக ஜெர்மனியை உலுக்கி வருகிறது. குறிப்பாக மின்சார விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதால், அரசு புதிய மாற்று தீர்வுகளை ஆராய வேண்டிய சூழலில் தள்ளப்பட்டு உள்ளது.
பொதுவாக ஐரோப்பிய நாடுகள் கிளீன் எனர்ஜி மீது அதிகம் கவனம் செலுத்தும் வேளையில் இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் உடனடி மாற்று தீர்வாக என்ன இருக்க முடியும்..? ஜெர்மனி அரசு தற்போது 'ஸ்டாண்ட்பை' நிலையில் உள்ள அதாவது பயன்படுத்தப்படாத நிலையில் நிலக்கரி மூலம் இயங்கும் அனல் மின் நிலையங்களை மீண்டும் முழுவேகத்தில் செயல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருகிறது. இது எரிபொருள் விலையை கட்டுப்படுத்தும் அவசர நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

ஜெர்மனி, கடந்த சில ஆண்டுகளாக கிளீன் எனர்ஜி மாற்றத்தில் முன்னணி நாடாக இருந்து வருகிறது. 2024-ல் மொத்த அந்நாட்டின்மின்சார பயன்பாட்டில் 58% மற்றும் 2025-ல் சுமார் 56% மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிபொருள் மூலம் கிடைத்துள்ளது. காற்றாலை மற்றும் சோலார் மின்சாரம் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மேலும், 2030க்குள் 80% மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க வளங்களில் இருந்து பெறவும், 2045க்குள் கார்பன் நியூட்ராலிட்டி அடையவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதைய எரிபொருள் நெருக்கடி இந்த இலக்குகளை தற்காலிகமாக சவாலுக்கு உள்ளாக்கியுள்ளது.
நிலக்கரிக்கு மீண்டும் திரும்பும் நிலை
இந்த புதிய ஆய்வு, ஜெர்மனி மீண்டும் 'லிக்னைட்' (brown coal) எனப்படும் சுற்றுசூழல் மாசு அதிகம் உண்டாக்கும் நிலக்கரியை பயன்படுத்தும் நிலைக்கு திரும்பும் நிலை ஏற்பட்டு உள்ளது. முன்பு, ஜெர்மனியின் மின்சார உற்பத்தியின் மூன்றில் ஒரு பங்கு நிலக்கரியிலிருந்தே கிடைத்தது. அதில் பெரும்பகுதி லிக்னைட் மூலம் உற்பத்தி செய்யப்பட்டதாகும்.
ஜெர்மனி உலகின் மிகப்பெரிய லிக்னைட் உற்பத்தியாளராகவும் இருந்தது. 2038க்குள் நிலக்கரி பயன்பாட்டை முற்றிலும் நிறுத்தும் திட்டம் ஜெர்மனி அரசுக்கு இருந்த நிலையில், தற்போதைய சூழல் அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா மத்தியிலான போர் காரணமாக கச்சா எண்ணெய், எரிவாயு விலை அதிகரித்துள்ளது. இது மின்சார உற்பத்தி விலையையும் பாதிக்கிறது.
ரஷ்யா எரிவாயு இழப்பு
2022-ல் ரஷ்யா வழியாக கிடைத்த இயற்கை எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டதிலிருந்து, ஜெர்மனி அதிக விலைக்கு LNG (Liquefied Natural Gas) இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுவும் மின்சார விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
இந்த நிலைமையில், குறைந்த செலவில் உள்நாட்டு எரிபொருள் ஆதாரங்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. அதனால் தான் நிலக்கரி மின் நிலையங்களை மீண்டும் இயக்குவது குறித்து அந்நாட்டு அரசு தீவிரமாக யோசித்து வருகிறது.
இந்த மாற்றம், ஜெர்மனி போன்ற வல்லரசு நாடுகளுக்கே எரிபொருள் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை காட்டுகிறது. ஒரு பக்கம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றொரு பக்கம் பொருளாதார அழுத்தம் என்ற இரு சவால்களுக்கிடையில் சமநிலை காண வேண்டிய கட்டாயத்தில் ஜெர்மனி மட்டும் அல்லாமல் உலகின் அனைத்து நாடுகளும் உள்ளது.
உலக நாடுகள் கிளீன் எனர்ஜி பாதையில் சென்றாலும், அவசர காலங்களில் நிலக்கரி தான் முக்கிய ஆதாரமாக மாறுகிறது.
More From GoodReturns

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

Israel ரத்த வெள்ளம், Iran குறிவைத்த அணுசக்தி தளம்! முடங்கிய Iron Dome - அதிர்ச்சியில் நெதன்யாகு சொன்ன வார்த்தை

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!

ஈரான் போரால் இந்தியாவில் புது பிரச்சனை.. மருத்துவமனைகளில் ஷாக்.. என்ன நடக்குது?!

14.2 கிலோ சிலிண்டரில் 10 கிலோ LPG.. மத்திய அரசின் புது திட்டம்.. நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை..!

இந்தியாவுக்கு குட்நியூஸ்..!! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் திடீரென மனம் இறங்கிய ஈரான்..!!



Click it and Unblock the Notifications