இந்திய வாகன விற்பனையில் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் இனி எதிர்காலம் என்பதால் இரு சக்கர வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களில் பிரிவில் அதிகப்படியான வாகனங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் மத்திய அரசு கொடுக்கும் மானியமும், மாநில அரசு கொடுக்கும் சலுகைகளும் தான்.
ஆனால் இதுநாள் வரையில் மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி கனரக வாகனங்களுக்கு எவ்விதமான சலுகையும் அளிக்கவில்லை. இதேபோல் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இப்பிரிவில் தீவிரமாக இறங்காத நிலையில், சமீபத்தில் கவனம் செலுத்த துவங்கியுள்ளது. இப்படியிருக்கும் வேளையில் மத்திய அரசு தரப்பில் இருந்து மாபெரும் மானிய திட்டத்துடன் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் டீசல் டிரக்குகள் என்பது மொத்த வாகன எண்ணிக்கையில் வெறும் 3% மட்டுமே, ஆனால் போக்குவரத்து உமிழ்வில் இந்த 3 சதவீத டீசல் டிரக்குகள் சுமார் 42% பங்களிக்கின்றன என்று மத்திய அமைச்சர் குமாரசாமி குறிப்பிட்டார். இந்த உமிழ்வை குறைக்க, மத்திய அரசு எலக்ட்ரிக் டிரக்குகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் சரி செய்ய முடியும் என நம்புகிறது.
எச்.டி.குமாரசாமி முக்கிய அறிவிப்பு: இப்புதிய திட்டத்தை இன்று வெளியிட்ட மத்திய கனரக தொழில்கள் அமைச்சர் எச்.டி.குமாரசாமி, பிஎம் இ-டிரைவ் திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் டிரக்குகளுக்கு முதல் முறையாக ஊக்குவிப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவின் வாகன உமிழ்வைக் குறைத்து, 2070 ஆம் ஆண்டுக்குள் நெட் ஜீரோ உமிழ்வு இலக்கை அடையும் நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவித்தார்.
PM E-DRIVE initiative for electric trucks: இந்த திட்டத்தின் கீழ் , இரண்டு ஆண்டுகளுக்கு 10,900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மானிய தொகையை மத்திய மோட்டார் வாகன விதிகளின் (CMVR) கீழ் வரையறுக்கப்பட்ட N2 மற்றும் N3 வகை எலக்ட்ரிக் டிரக்குகளுக்கு வழங்கப்பட உள்ளது.
9.6 லட்சம் ரூபாய் மானியம்: இந்த மானியம், வாகனத்தின் மொத்த எடையைப் பொறுத்து மாறுபடும் என கூறிய அமைச்சர் எச்.டி.குமாரசாமி, ஒரு வாகனத்திற்கு அதிகபட்சமாக 9.6 லட்சம் ரூபாய் வரை இத்திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படும் என விளக்கம் கொடுத்தார்.
மேலும் இந்த மானிய தொகை எலக்ட்ரிக் டிரக்குகளை வாங்கும் போதே அதன் விற்பனை விலையில் மூலம் வழங்கப்படும், மேலும் இந்த மானியம் முதல்-வருபவர்களுக்கு முதலில்-வழங்கப்படும் (first-come, first-served) எனவும் வரையறுக்கப்பட்டு உள்ளது. பிஎம் இ-டிரைவ் இணையதளம் மூலம் உற்பத்தியாளர்களுக்கு இத்தொகை திருப்பி அளிக்கப்படும், வாடிக்கையாளர்கள் கைகளுக்கு வராது.
இந்த திட்டம் வாயிலாக சுமார் 5,600 எலக்ட்ரிக் டிரக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதை இலக்காகக் கொண்டுள்ளது. முதல்கட்டமாக டெல்லியில் காற்று தரத்தை மேம்படுத்த, இந்த திட்டத்தின் கீழ் 1,100 எலக்ட்ரிக் டிரக்குகளுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (SAIL), அடுத்த இரண்டு ஆண்டுகளில் 150 எலக்ட்ரிக் டிரக்குகளை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் டிரக்குகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய, உற்பத்தியாளர்கள் விரிவான வாரென்டி வழங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமாக வாகனங்களுக்கு ஐந்து ஆண்டுகள் அல்லது 5 லட்சம் கிலோமீட்டர் வரையில் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். இதேபோல் வாகன மோட்டார்களுக்கு ஐந்து ஆண்டுகள் அல்லது 2.5 லட்சம் கிலோமீட்டர் உத்தரவாதம் ஆகியவையும் வழங்கப்படும். இவற்றில் எது முதலில் நிறைவடைகிறதோ அது பொருந்தும்.
இந்த உத்தரவாதங்கள், வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும், மேலும் எலக்ட்ரிக் டிரக்குகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும். இந்த ஊக்குவிப்பு திட்டம், எலக்ட்ரிக் வாகனங்களின் விலையை மலிவாக்குவதோடு, எலக்ட்ரிக் டிரக்குகளின் பயன்பாட்டை அதிகரிக்கும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications