சிறு, குறு தொழில் முனைவோரை ஆதரிக்கும் பொருட்டு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2020-ஆம் ஆண்டு பல்வேறு தொழில்முனைவோர்கள் சிக்கலை எதிர்கொண்ட ஆண்டாக அமைந்தது. காரணம் கோவிட் 19 தொற்று நோய் பரவி பலத் தொழிலாளர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் "பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா" (PM Svanidhi Yojana). இதன் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.50,000 வரை கடன் வழங்கப்படுகிறது
எவ்வளவு கடன் கிடைக்கும்?: இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு எந்த வித உத்தரவாதமுமின்றி ஆதார் அட்டையை மட்டும் வைத்து கடன் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக வியாபாரிகளுக்கு 10,000 ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடனை அவர்கள் சரிவர திருப்பிச் செலுத்தினால் அடுத்த முறை மீண்டும் 20,000 ரூபாய் கடன் பெறலாம். முந்தைய கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தும் போது இந்தத் தொகை ரூ. 50,000 வரை உயரும். அதாவது 50,000 ரூபாய் வரை எந்தவித பினையவும் இல்லாமல் கடன் பெறலாம்.

பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் கீழ் கடன் பெற ஆதார் கார்டு அவசியம். வணிகர்கள் ஆதார் கார்டைப் பயன்படுத்தி அரசு வங்கியில் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். கடனைத் தவணை முறையில் திருப்பிச் செலுத்த வேண்டும். குறிப்பாக 12 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?: PM ஸ்வநிதி இணையதளத்தின் படி கடன் பெற விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். கண்டிப்பாக உங்களுடைய மொபைல் நம்பர் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் ஆன்லைனில் விண்ணப்பம் செயல் முறையின் போது இ-கேஒய்சி சரிபார்ப்பு தேவைப்படும். கூடுதலாக கடன் வாங்குபவர்கள் அரசாங்க நலத்திட்டங்களில் பலன்பெற நகர்புற உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்தும் கடிதத்தை பெற வேண்டும்.
பிரதான் மந்திரி ஸ்வநிதி திட்டத்தின் கீழ் பயன்பெற நான்கு விற்பனையாளர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள். எனவே தகுதி அளவுகோல்களை சரி பார்த்து அதன் பிறகு விண்ணப்பிக்க வேண்டும். கடன் பெற நினைப்பவர்கள் நேரடியாக போர்ட்டல் மூலமாக விண்ணப்பிக்கலாம் அல்லது தங்கள் உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள பொது சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
வட்டி விகிதம்: வணிக வங்கிகள், கிராமப்புற வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளில் வட்டி விகிதங்கள் நடைமுறையில் உள்ள விகிதங்களின் படி இருக்கும். NBFCகள், NBFC-MFI-கள் போன்றவற்றுக்கு, வட்டி விகிதங்கள் RBI வழிகாட்டுதல்களின்படி இருக்கும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications