குடும்பத்திற்குள் சொத்தை பரிசளிப்பது இயல்பான விஷயம்தான். ஒரு குடும்பத்திற்குள் தங்களின் அன்புக்குரியவர்களுக்கு நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெரும்பாலான நேரங்களில் சொத்துக்களை பரிசளிப்பது வழக்கம். பெரிய அளவிலான செல்வத்தை பரிசாக வழங்கும்போது அவற்றுக்கு வரி விதிக்கப்படும். ஆனால் உறவினர்களுக்கு வழங்கும்போது அவற்றுக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது. அதுவே உறவினர் அல்லாத சொந்தங்களுக்கு வழங்கும்போது அதற்கு வரி விதிக்கப்படுகிறது.
வருமான வரிச் சட்டத்தின் படி, உறவினர்களின் கீழ் மனைவி, உடன்பிறந்தவர், மனைவியின் உடன்பிறப்பு, பெற்றோரின் உடன்பிறந்தவர், தனி நபர் அல்லது மனைவியின் பரம்பரை ஆகிய உறவினர்களுக்கு சொத்துக்களை பரிசாக வழங்கும்போது IT சட்டத்தின் பிரிவு 56(2)-இன் கீழ் வரி விலக்கு உண்டு.

பரிசளிப்பதற்கான சொத்துகளின் வகைகள்
ரொக்கம்: ரொக்கப் பரிசுகள் பொதுவானவை என்றாலும், குறிப்பிடத்தக்க தொகைகளுக்கு வங்கிப் பரிமாற்றங்களைப் பயன்படுத்தவும்.
சொத்து: நிலம் / கட்டிடங்களின் பரிசுப் பத்திரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
அசையும் சொத்துக்கள்: தங்கம், நகைகள், பங்குகள், பத்திரங்கள் மற்றும் பிற நிதிக் கருவிகள் இதில் அடங்கும். பரிமாற்ற ஆவணம் அல்லது தான பத்திரத்தை இதற்குப் பயன்படுத்த வேண்டும்.
பாலிசி: உரிமையை மாற்றுவதன் மூலம் தகுந்த பாலிசிகளையும் பரிசளிக்கலாம்.
தான பத்திரம்: தான பத்திரம் என்பது ஒரு சட்டப்பூர்வ ஆவணமாகும், இது நன்கொடையாளரிடமிருந்து பெறுநருக்கு எந்தவொரு பரிசீலனையும் இல்லாமல் ஒரு சொத்தை மாற்றுவதற்கான ஆவணமாகும். அதில் நன்கொடையாளர், பெறுநர் மற்றும் பரிசளிக்கப்பட்ட சொத்து விவரங்கள் இடம் பெற்றிருக் வேண்டும். அசையாச் சொத்துகளுக்கு, பரிசுப் பத்திரம் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் முத்திரைக் கட்டணம் செலுத்த வேண்டும். நன்கொடையாளரின் வாழ்நாளில் பரிசைப் பெறுபவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். பரிசுப் பத்திரத்தில் இரண்டு சாட்சிகள் கையெழுத்திட வேண்டும்.
தான பத்திரம் என்றால் என்ன?: பரிசு பத்திரம் என்பது பணப்பரிமாற்றம் இல்லாமல், பரிசு வழங்குபவர் தாமாக முன்வந்து, தங்களுடைய சொத்தை பிறருக்கு வழங்கும் சட்டப்பூர்வ ஆவணமாகும். இது எல்லா சொத்துக்களுக்கும் தேவையில்லை என்றாலும் பரிசின் சட்டபூர்வ நிலையை உறுதிப்படுத்த தான பத்திரம் உதவுகிறது.
வரி விதிப்பு: குறிப்பிட்ட உறவினர்களிடமிருந்து பெறப்படும் பரிசுகளுக்கு வருமான வரி விலக்கு உண்டு. 50,000-க்கு மேல் உறவினர்கள் அல்லாதவர்களுக்கு பரிசுகளை வழங்கும்போது வரி விதிக்கப்படும். வாடகை வருமானம் அல்லது ஈவுத்தொகை போன்ற அன்பளிப்புச் சொத்திலிருந்து உருவாக்கப்படும் எந்தவொரு வருமானத்திற்கும் வரி விதிக்கப்படும்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்: வங்கி பரிமாற்றச் சான்றுகள் மற்றும் பரிசுப் பத்திரங்கள் உட்பட பரிசு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வைத்திருங்கள். அனைத்து சட்டத் தேவைகள் மற்றும் வரி நுணுக்கங்களுடன் இணங்குவதை உறுதிப்படுத்த தொழில்முறை சட்ட மற்றும் நிதி ஆலோசனையைப் பெறுவது நல்லது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications