ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் கோழிப்பண்ணை வைத்து தொழிலதிபர் ஆகலாம் என சுகுணா சிக்கன் அழைப்பு விடுத்துள்ளது.
கோவையை சேர்ந்த சுகுணா புட்ஸ் நிறுவனத்தின் அங்கமான சுகுணா சிக்கன், கோழிக்கறி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனம் அவ்வப்போது பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி புதிதாக கோழிப்பண்ணை வைக்க விரும்புபவர்களுக்கு ஊக்கம் கொடுத்து வருகிறது.
கோழிப்பண்ணை வர்த்தகம்
அந்த வகையில் கோழிப்பண்ணை வர்த்தகத்தில் ஈடுபட விரும்புபவர்கள் தங்கள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும் என்றும் அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்வோம் என்றும் சுகுணா சிக்கன் தெரிவித்துள்ளது.
சுகுணா சிக்கன்
ஏற்கனவே ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களது நிறுவனத்துடன் தொடர்புகொண்டு கோழிப்பண்ணை தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் விருப்பமுள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் சுகுணா சிக்கன் தெரிவித்துள்ளது.
பிராய்லர்
இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்திக்குறிப்பு ஒன்றில் பிராய்லர், லேயர் பார்மிங், குஞ்சு மையம், தீவனம் ஆலை உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ள சுகுணா புட்ஸ் நிறுவனம் கோழிப்பண்ணை விவசாயத்தை நீடித்த நிலையான தன்மையுடன் வளர்க்க முடியும் என நம்புகிறது.
மிஸ்டு கால்
எனவே கோழிப்பண்ணை அமைக்க ஆர்வமுள்ள விவசாயிகள் 9894398944 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் எந்த வித இடைத்தரகர்கள் பிரச்சனை இல்லாமல் எங்களை நேரடியாக தொடர்பு கொண்டு கோழி பண்ணை வைக்கலாம் என்றும் நாட்டில் கோழிப்பண்ணை எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஆர்வம் உழைப்பு திறமை
கோழிப்பண்ணை வைப்பதற்கு எந்தவிதமான பெரிய முதலீடும் தேவையில்லை என்றும் ஆர்வமும் திறமையும் உழைப்பும் இருந்தால் போதும் தொழிலதிபர் ஆவதற்கு சுகுணா சிக்கன் உதவி செய்யும் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிய வாய்ப்பு
எனவே கடின உழைப்பு ஈடுபாடு ஆர்வம் ஆகியவை இருந்தால் சுகுணா சிக்கன் போன்று பல நிறுவனங்கள் சாதாரண மனிதர்களை தொழிலதிபராக்கி வரும் நிலையில் இதுபோன்ற அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications