கோடை வெயில் பொளந்துக்கட்டும் வேளையிலும், விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வேளையிலும் மக்கள் வீட்டில் இருந்து பணியாற்றவே விரும்புகின்றனர். இன்னும் சிலர் பெங்களூர் தண்ணீர் பிரச்சனை காரணம் காட்டி சொந்த ஊருக்கே சென்றுள்ளனர்.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனே, நொய்டா, டெல்லி, மும்பை, கொச்சி என நாட்டின் அனைத்து பெருநகரங்களில் இருக்கும் நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்குக் கட்டாயப்படுத்தி வரவழைத்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக நாட்டின் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களும் வாரத்தில் குறைந்தது 3 நாட்களாவது அலுவலகத்திற்கு வரவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் ஒரு நிறுவனம் இப்படிப்பட்ட காலகட்டத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் வொர்க் ப்ரம் ஹோம் கொடுத்துள்ளது.
மென்பொருள் நிறுவனமான க்ளோபண்ட் எஸ்.ஏ, (Globant SA) கொரோனா தொற்றுநோய் காலத்திற்குப் பின், பணிச்சூழலில் புதுமையான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்ட்டின் மிகோயா அண்மையில் Bloomberg செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Globant நிறுவனம் இந்தியாவிலும் இயங்கி வருகிறது, பெங்களூரில் அலுவலகம் வைத்துள்ளது. பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்குத் திரும்ப அழைத்து வரும் நிலையில், க்ளோபண்ட் நிறுவனம் கிட்டத்தட்ட 33 நாடுகளில் பரவியுள்ள தனது 30,000 ஊழியர்களுக்கும் முழுமையான வீட்டிலிருந்து பணிபுரியும் கொள்கையை (work from home) நிரந்தரமாக அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
Bloomberg செய்தி நிறுவனத்தின் தகவல்படி, க்ளோபண்ட் நிறுவனத்தின் சிஇஓ மார்ட்டின் மிகோயா, ஊழியர்கள் மத்தியிலான நேருக்கு நேர் நடக்கும் கலந்துரையாடல் முக்கியத்துவம் என்பதை உணர்ந்தவர், ஆனால் இது கட்டாயப்படுத்திச் செயல்படுத்தக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
க்ளோபண்ட் தனது அலுவலகங்களுக்கான இடத்தை அதிகரித்து வருகிறது, மேலும் ஊழியர்கள் இயல்பாகவே அலுவலகத்திற்குத் திரும்புவதையும் கவனித்து அதற்கேற்ப அலுவலகத்தை மாற்றி அமைத்து வருகிறது. ஆனால், நிறுவனம் கட்டாயப்படுத்தி ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவழைப்பதில் எவ்விதமான பயனுமில்லை என்பதை உறுதியாக மார்ட்டின் மிகோயா மற்றும் க்ளோபண்ட் நிறுவனத்தின் நிர்வாகம் நம்புகிறது.
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications